என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு- காஞ்சி சங்கராச்சாரியார் இரங்கல்
Byமாலை மலர்26 Sep 2020 2:49 AM GMT (Updated: 26 Sep 2020 2:49 AM GMT)
பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் மறைவுக்கு காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
இசையுலகின் ஒப்பற்ற நாயகனாக விளங்கிய எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவு இசை உலகினர் மட்டுமல்லாது அனைத்து மக்களுக்கும் மிகுந்த வருத்தத்தை அளிக்ககூடிய ஒன்றாகும்.
திரையிசைக்கு அப்பாற்பட்டு ஆன்மிகத்திலும் பற்று கொண்டவராக விளங்கினார். பல பக்தி பாடல்களை பாடி மக்களிடையே பக்தி மணம் பரப்பியவர்.
காஞ்சி சங்கர மடத்தின் மீதும் சங்கராச்சாரியார்கள் மீதும் ஆழ்ந்த பக்தியும், மிகுந்த மரியாதையும் கொண்டவர். கடந்த பிப்ரவரி மாதம் நெல்லூரில் உள்ள அவரது பூர்வீக வீட்டை மடத்திற்கு வேத நாத பாடசாலை தொடங்குவதற்கு தானமாக கொடுத்து, அவருடைய பக்தியை வெளிப்படுத்தினார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு மன அமைதி கிடைக்க வேண்டி மகாத்ரிபுரசுந்தரி சமேத சந்திர மவுலீஸ்வர சாமியை பிரார்த்திக்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
இசையுலகின் ஒப்பற்ற நாயகனாக விளங்கிய எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவு இசை உலகினர் மட்டுமல்லாது அனைத்து மக்களுக்கும் மிகுந்த வருத்தத்தை அளிக்ககூடிய ஒன்றாகும்.
திரையிசைக்கு அப்பாற்பட்டு ஆன்மிகத்திலும் பற்று கொண்டவராக விளங்கினார். பல பக்தி பாடல்களை பாடி மக்களிடையே பக்தி மணம் பரப்பியவர்.
காஞ்சி சங்கர மடத்தின் மீதும் சங்கராச்சாரியார்கள் மீதும் ஆழ்ந்த பக்தியும், மிகுந்த மரியாதையும் கொண்டவர். கடந்த பிப்ரவரி மாதம் நெல்லூரில் உள்ள அவரது பூர்வீக வீட்டை மடத்திற்கு வேத நாத பாடசாலை தொடங்குவதற்கு தானமாக கொடுத்து, அவருடைய பக்தியை வெளிப்படுத்தினார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு மன அமைதி கிடைக்க வேண்டி மகாத்ரிபுரசுந்தரி சமேத சந்திர மவுலீஸ்வர சாமியை பிரார்த்திக்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X