என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முக கவசம் அணியாமல் மீன் மார்க்கெட்டுகளில் குவிந்த பொதுமக்கள்
Byமாலை மலர்13 Sep 2020 8:10 AM GMT (Updated: 13 Sep 2020 8:10 AM GMT)
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள மீன் மார்க்கெட்டில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஏராளமான பொதுமக்கள் மீன் வாங்க குவிந்தனர்.
விழுப்புரம்:
தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்தும் பொருட்டு அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு கடந்த சில மாதங்களாக ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வந்தது.
கொரோனா ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளை அரசு அறிவித்தது. அதன் பேரில் ஞாயிற்றுகிழமைகளில் கடைபிடிக்கப்பட்டு வந்த முழு ஊரடங்கில் செப்டம்பர் மாதம் முதல் தளர்வுகள் அளிக்கப்பட்டது. ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கிலும் தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள இறைச்சி,மீன் கடைகளில் பொதுமக்களின் கூட்டம் குவிய தொடங்கியது.
இந்த மாதத்தின் 2-வது ஞாயிற்றுகிழமையான இன்று விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள மீன் மார்க்கெட்டில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஏராளமான பொதுமக்கள் மீன் வாங்க குவிந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியையும் பின்பற்றாமல் மீன் வாங்கும் ஆர்வத்தில் ஒருவரை ஒருவர் முண்டியடித்து கொண்டு கூட்டமாக நின்றனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்தும் பொருட்டு அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு கடந்த சில மாதங்களாக ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வந்தது.
கொரோனா ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளை அரசு அறிவித்தது. அதன் பேரில் ஞாயிற்றுகிழமைகளில் கடைபிடிக்கப்பட்டு வந்த முழு ஊரடங்கில் செப்டம்பர் மாதம் முதல் தளர்வுகள் அளிக்கப்பட்டது. ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கிலும் தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள இறைச்சி,மீன் கடைகளில் பொதுமக்களின் கூட்டம் குவிய தொடங்கியது.
இந்த மாதத்தின் 2-வது ஞாயிற்றுகிழமையான இன்று விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள மீன் மார்க்கெட்டில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஏராளமான பொதுமக்கள் மீன் வாங்க குவிந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியையும் பின்பற்றாமல் மீன் வாங்கும் ஆர்வத்தில் ஒருவரை ஒருவர் முண்டியடித்து கொண்டு கூட்டமாக நின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X