என் மலர்
செய்திகள்

பவானி- அனுஷ்கா- முருகன்
நெல்லையில் திருநங்கைகள் உள்பட 3 பேர் படுகொலை- 3 பேர் கைது
நெல்லையில் திருநங்கைகள் உள்பட 3 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களது உடல்கள் சாக்குமூட்டையில் கட்டி கிணற்றில் வீசப்பட்டது. இதுதொடர்பாக 3பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லையை அடுத்த நரசிங்கநல்லூர் திருநங்கை காலனியில் வசித்தவர் பவானி (வயது 28). திருநங்கையான இவரும், முனைஞ்சிப்பட்டி அருகே உள்ள காரியாண்டியைச் சேர்ந்த பெயிண்டர் முருகனும் (30) திருநங்கை காலனியில் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இவர்கள் தங்களுக்கு குழந்தையை தத்தெடுக்க எண்ணினர்.
இதனை அறிந்த, அப்பகுதியைச் சேர்ந்த ரிஷிகேஷ் என்ற தங்கவேல் (30), முருகன்-பவானி ஆகியோருக்கு குழந்தையை தத்தெடுத்து தருவதாக கூறி, அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் வாங்கினார்.
இதையடுத்து கடந்த 19-ந் தேதி தங்கவேல் தனது சொந்த ஊரான சேலத்துக்கு சென்று, குழந்தையை தத்தெடுத்து தருவதாக கூறி, முருகன்-பவானி ஆகியோரை காரில் அழைத்து சென்றார். அப்போது பவானி, அப்பகுதியைச் சேர்ந்த தனது தோழியான அனுஷ்கா (24) என்ற திருநங்கையையும் தங்களுடன் காரில் அழைத்து சென்றார்.
பின்னர் தங்கவேல் மட்டும் தனது வீட்டுக்கு திரும்பி வந்தார். முருகன், பவானி, அனுஷ்கா ஆகிய 3 பேரும் தங்களது வீடுகளுக்கு திரும்பி வரவில்லை. அவர்களது செல்போன்களும் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.
இதற்கிடையே பவானி கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது உடலை சாக்கு மூட்டையில் வைத்து இருப்பது போன்ற புகைப்படம் ‘வாட்ஸ்-அப்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்த திருநங்கைகள், முருகன், பவானி, அனுஷ்கா ஆகிய 3 பேரும் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறி, கதறி அழுதவாறு நேற்று சுத்தமல்லி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
மேலும் தங்கவேல், அவருடைய மனைவி ரேணுகா, தங்கவேலின் தங்கை ஹரினா, டிரைவர் செல்லத்துரை என்ற ராஜா (33), பாளையங்கோட்டை சாந்தி நகரைச் சேர்ந்த பைனான்ஸ் தொழில் செய்து வரும் ஸ்னோவின் (29) ஆகிய 5 பேரையும் பிடித்து திருநங்கைகள், சுத்தமல்லி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அதன் விவரம் வருமாறு:-
முருகன்-பவானி ஆகிய 2 பேரும் நரசிங்கநல்லூர் திருநங்கை காலனியில் வசித்தாலும், பாளையங்கோட்டை மகாராஜநகரிலும் வாடகை வீடு எடுத்து தங்கியிருந்தனர். அங்கு தங்கியிருந்தவாறு முருகன் பெயிண்டர் வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் முருகன்-பவானி ஆகிய 2 பேரும் குழந்தையை தத்தெடுப்பதற்காக தங்கவேலிடம் ரூ.3 லட்சம் வழங்கினர். பின்னர் தங்கவேல் குழந்தையை தத்தெடுத்து கொடுக்காமலும், பணத்தை திருப்பி தராமலும் தாமதப்படுத்தி வந்தார். இதுதொடர்பாக முருகன்-பவானி ஆகிய 2 பேரும் அடிக்கடி தங்கவேலிடம் தொந்தரவு செய்ததால், அவர்களை தீர்த்துக்கட்டுவதற்கு தங்கவேல் திட்டமிட்டார்.
அதன்படி முருகன்-பவானி ஆகியோருக்கு குழந்தையை தத்தெடுத்து தருவதாக கூறி, அவர்களை சேலத்துக்கு காரில் அழைத்து செல்வதாக தங்கவேல் கூறினார். அதன்படி பாளையங்கோட்டை மகாராஜநகரில் இருந்து காரில் புறப்பட்டு செல்ல திட்டமிட்டனர். அவர்களுடன் அனுஷ்காவும் செல்ல முடிவு செய்தார்.
சம்பவத்தன்று இரவில் பாளையங்கோட்டை மகாராஜநகரில் இருந்து அனைவரும் காரில் சேலத்துக்கு புறப்பட தயாராக இருந்தனர். அப்போது தங்கவேல் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து முருகன், பவானி, அனுஷ்கா ஆகிய 3 பேரையும் கம்பால் அடித்தும், கழுத்தை நெரித்தும் கொலை செய்துள்ளார். தொடர்ந்து கொலை செய்யப்பட்ட 3 பேரின் உடல்களையும் தனித்தனி சாக்கு மூட்டைகளில் வைத்து கட்டினர்.
பின்னர் அவர்களது உடல்களை பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் கக்கன்நகர் நாற்கரசாலை அருகில் உள்ள பாழடைந்த 2 கிணறுகளில் வீசினர்.
மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக தங்கவேல், செல்லத்துரை, ஸ்னோவின் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். நெல்லையில் திருநங்கைகள் உள்பட 3 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லையை அடுத்த நரசிங்கநல்லூர் திருநங்கை காலனியில் வசித்தவர் பவானி (வயது 28). திருநங்கையான இவரும், முனைஞ்சிப்பட்டி அருகே உள்ள காரியாண்டியைச் சேர்ந்த பெயிண்டர் முருகனும் (30) திருநங்கை காலனியில் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இவர்கள் தங்களுக்கு குழந்தையை தத்தெடுக்க எண்ணினர்.
இதனை அறிந்த, அப்பகுதியைச் சேர்ந்த ரிஷிகேஷ் என்ற தங்கவேல் (30), முருகன்-பவானி ஆகியோருக்கு குழந்தையை தத்தெடுத்து தருவதாக கூறி, அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் வாங்கினார்.
இதையடுத்து கடந்த 19-ந் தேதி தங்கவேல் தனது சொந்த ஊரான சேலத்துக்கு சென்று, குழந்தையை தத்தெடுத்து தருவதாக கூறி, முருகன்-பவானி ஆகியோரை காரில் அழைத்து சென்றார். அப்போது பவானி, அப்பகுதியைச் சேர்ந்த தனது தோழியான அனுஷ்கா (24) என்ற திருநங்கையையும் தங்களுடன் காரில் அழைத்து சென்றார்.
பின்னர் தங்கவேல் மட்டும் தனது வீட்டுக்கு திரும்பி வந்தார். முருகன், பவானி, அனுஷ்கா ஆகிய 3 பேரும் தங்களது வீடுகளுக்கு திரும்பி வரவில்லை. அவர்களது செல்போன்களும் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.
இதற்கிடையே பவானி கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது உடலை சாக்கு மூட்டையில் வைத்து இருப்பது போன்ற புகைப்படம் ‘வாட்ஸ்-அப்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்த திருநங்கைகள், முருகன், பவானி, அனுஷ்கா ஆகிய 3 பேரும் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறி, கதறி அழுதவாறு நேற்று சுத்தமல்லி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
மேலும் தங்கவேல், அவருடைய மனைவி ரேணுகா, தங்கவேலின் தங்கை ஹரினா, டிரைவர் செல்லத்துரை என்ற ராஜா (33), பாளையங்கோட்டை சாந்தி நகரைச் சேர்ந்த பைனான்ஸ் தொழில் செய்து வரும் ஸ்னோவின் (29) ஆகிய 5 பேரையும் பிடித்து திருநங்கைகள், சுத்தமல்லி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அதன் விவரம் வருமாறு:-
முருகன்-பவானி ஆகிய 2 பேரும் நரசிங்கநல்லூர் திருநங்கை காலனியில் வசித்தாலும், பாளையங்கோட்டை மகாராஜநகரிலும் வாடகை வீடு எடுத்து தங்கியிருந்தனர். அங்கு தங்கியிருந்தவாறு முருகன் பெயிண்டர் வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் முருகன்-பவானி ஆகிய 2 பேரும் குழந்தையை தத்தெடுப்பதற்காக தங்கவேலிடம் ரூ.3 லட்சம் வழங்கினர். பின்னர் தங்கவேல் குழந்தையை தத்தெடுத்து கொடுக்காமலும், பணத்தை திருப்பி தராமலும் தாமதப்படுத்தி வந்தார். இதுதொடர்பாக முருகன்-பவானி ஆகிய 2 பேரும் அடிக்கடி தங்கவேலிடம் தொந்தரவு செய்ததால், அவர்களை தீர்த்துக்கட்டுவதற்கு தங்கவேல் திட்டமிட்டார்.
அதன்படி முருகன்-பவானி ஆகியோருக்கு குழந்தையை தத்தெடுத்து தருவதாக கூறி, அவர்களை சேலத்துக்கு காரில் அழைத்து செல்வதாக தங்கவேல் கூறினார். அதன்படி பாளையங்கோட்டை மகாராஜநகரில் இருந்து காரில் புறப்பட்டு செல்ல திட்டமிட்டனர். அவர்களுடன் அனுஷ்காவும் செல்ல முடிவு செய்தார்.
சம்பவத்தன்று இரவில் பாளையங்கோட்டை மகாராஜநகரில் இருந்து அனைவரும் காரில் சேலத்துக்கு புறப்பட தயாராக இருந்தனர். அப்போது தங்கவேல் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து முருகன், பவானி, அனுஷ்கா ஆகிய 3 பேரையும் கம்பால் அடித்தும், கழுத்தை நெரித்தும் கொலை செய்துள்ளார். தொடர்ந்து கொலை செய்யப்பட்ட 3 பேரின் உடல்களையும் தனித்தனி சாக்கு மூட்டைகளில் வைத்து கட்டினர்.
பின்னர் அவர்களது உடல்களை பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் கக்கன்நகர் நாற்கரசாலை அருகில் உள்ள பாழடைந்த 2 கிணறுகளில் வீசினர்.
மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக தங்கவேல், செல்லத்துரை, ஸ்னோவின் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். நெல்லையில் திருநங்கைகள் உள்பட 3 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story