search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெய்வேலி அனல் மின் நிலையம்
    X
    நெய்வேலி அனல் மின் நிலையம்

    என்.எல்.சி. பாய்லர் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு

    நெய்வேலி என்.எல்.சி. பாய்லர் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது.
    கடலூர்:

    நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் 2-ம் அனல் மின்நிலையத்தில் கடந்த 1-ந்தேதி கொதிகலன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் 6 ஒப்பந்த தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 17 பேர் படுகாயமடைந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் ஜூலை 05 -ம் தேதி மேலும் ஒருவர் உயிரிழந்தார். தொடர்ந்து 16 பேர் சிகிச்சை பெற்று வந்தநிலையில் அடுத்தடுத்து 13 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 2 பேர் இளநிலை பொறியாளர்கள், 9 ஒப்பந்த ஊழியர்கள், 2 பேர் நிரந்தர ஊழியர்கள் ஆவார்கள்.

    இந்நிலையில், இந்த விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்தது. சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுரேஷ் என்ற ஊழியர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், நெய்வேலி என்எல்சி-க்கு ரூ.5 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×