என் மலர்
செய்திகள்

எடப்பாடி பழனிசாமி
அரியலூர் அரசு மருத்துவமனை அருகே கட்டப்பட்ட ரெயில்வே மேம்பாலம்- முதல்வர் திறந்து வைத்தார்
அரியலூர் அரசு தலைமை மருத்துவமனை அருகே ரூ.45.34 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ரெயில்வே மேம்பாலத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அரியலூர்:
அரியலூர் அரசு தலைமை மருத்துவமனை அருகே ரூ.45.34 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ரெயில்வே மேம்பாலம், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் சுத்தமல்லி கிராமத்தில் ரூ.1.23 கோடி மதிப்பில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் ஆகியவற்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
தொடர்ந்து ரெயில்வே மேம்பாலம் மற்றும் சுத்தமல்லி உயர்மட்ட பாலத்தினை அரசு தலைமைக்கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன், மாவட்ட கலெக்டர் ரத்னா பார்வையிட்டு பாலத்தில் போக்குவரத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
அப்போது அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் கூறுகையில், இந்த ரெயில்வே பாலம் திறக்கப்படுவதால் அரியலூர் மாவட்டத்தில் உள்ள வாலாஜாநகரம், பளுவூர், ஆத்தூர், வாரணவாசி, அம்மாகுளம், தாமரை குளம், மேத்தால் போன்ற கிராமங்களும், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம், அல்லிநகரம் , மேலமாத்தூர், மருதையான்கோவில், கூத்தூர், கொளக்காநத்தம், புதுவேட்டக்குடி போன்ற பகுதிகளும் பயன்பெறும்.
இப்பாலத்தினால் சுற்று வட்டாரத்திலுள்ள ஏறக்குறைய 2.20 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள். இதே போல் தா.பழூர் ஊராட்சி ஒன்றியம் சுத்தமல்லி ஊராட்சியில் ரூ.1.23 கோடி மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட உயர்மட்ட பாலத்தினால் சுற்று வட்டார பகுதி மக்கள் பயன்பெறுவார்கள் என்றார் .
நிகழ்ச்சிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் சந்திரசேகர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் பழனிசாமி, மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் அசோகன், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் தஞ்சாவூர் சத்தியபிரகாஷ், கோட்டப்பொறியாளர் சர்புதீன், ராமச்சந்திரன், உதவி கோட்டப்பொறியாளர் ராஜா, நடராஜன், உதவிப் பொறியாளர் எழிலரசன், நடராஜன், ஆர்.டி.ஓ. பாலாஜி, தாசில்தார் சந்திரசேகர், ஊராட்சி ஆணையர் குமரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் பிரேம்குமார், சிவா, கூட் டுறவு பால் சொசைட்டி துணை தலைவர் பாஸ்கர், நகர வங்கி தலைவர் சங்கர், கோவிந்தபுரம் கூட்டுறவு வங்கி தலைவர் செல்வராஜ், நகர செயலாளர் செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அரியலூர் அரசு தலைமை மருத்துவமனை அருகே ரூ.45.34 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ரெயில்வே மேம்பாலம், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் சுத்தமல்லி கிராமத்தில் ரூ.1.23 கோடி மதிப்பில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் ஆகியவற்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
தொடர்ந்து ரெயில்வே மேம்பாலம் மற்றும் சுத்தமல்லி உயர்மட்ட பாலத்தினை அரசு தலைமைக்கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன், மாவட்ட கலெக்டர் ரத்னா பார்வையிட்டு பாலத்தில் போக்குவரத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
அப்போது அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் கூறுகையில், இந்த ரெயில்வே பாலம் திறக்கப்படுவதால் அரியலூர் மாவட்டத்தில் உள்ள வாலாஜாநகரம், பளுவூர், ஆத்தூர், வாரணவாசி, அம்மாகுளம், தாமரை குளம், மேத்தால் போன்ற கிராமங்களும், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம், அல்லிநகரம் , மேலமாத்தூர், மருதையான்கோவில், கூத்தூர், கொளக்காநத்தம், புதுவேட்டக்குடி போன்ற பகுதிகளும் பயன்பெறும்.
இப்பாலத்தினால் சுற்று வட்டாரத்திலுள்ள ஏறக்குறைய 2.20 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள். இதே போல் தா.பழூர் ஊராட்சி ஒன்றியம் சுத்தமல்லி ஊராட்சியில் ரூ.1.23 கோடி மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட உயர்மட்ட பாலத்தினால் சுற்று வட்டார பகுதி மக்கள் பயன்பெறுவார்கள் என்றார் .
நிகழ்ச்சிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் சந்திரசேகர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் பழனிசாமி, மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் அசோகன், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் தஞ்சாவூர் சத்தியபிரகாஷ், கோட்டப்பொறியாளர் சர்புதீன், ராமச்சந்திரன், உதவி கோட்டப்பொறியாளர் ராஜா, நடராஜன், உதவிப் பொறியாளர் எழிலரசன், நடராஜன், ஆர்.டி.ஓ. பாலாஜி, தாசில்தார் சந்திரசேகர், ஊராட்சி ஆணையர் குமரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் பிரேம்குமார், சிவா, கூட் டுறவு பால் சொசைட்டி துணை தலைவர் பாஸ்கர், நகர வங்கி தலைவர் சங்கர், கோவிந்தபுரம் கூட்டுறவு வங்கி தலைவர் செல்வராஜ், நகர செயலாளர் செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






