என் மலர்
செய்திகள்

பண்ருட்டி அருகே நீதிபதி வீட்டில் நகை கொள்ளை
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காடாம்புலியூர் மெயின்ரோடு பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன். இவர் இரும்பு, சிமென்ட் வியாபாரம் செய்து வருகிறார். வீடும், கடையும் ஒரே இடத்தில் உள்ளது.
இவரது மனைவி ரஜேஸ்வரி (வயது 40). கள்ளக்குறிச்சி நடுவர் நீதிமன்றகோர்ட்டில் நீதிபதியாக உள்ளார். இவர் விடுமுறை நாட்களில் காடாம்புலியூரில் உள்ள வீட்டுக்கு வருவது வழக்கம்.
நேற்று இரவு மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த நகை-வெள்ளி ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
காலையில் எழுந்து பார்த்த மணிகண்டன் பீரோ மற்றும் கதவு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து காடாம்புலியூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் நீதிபதியின் வீட்டுக்கு விரைந்தனர். விசாரணையில் 35 பவுன் நகை, 2½ கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்தது.கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.






