என் மலர்
செய்திகள்

கொலை
குடும்ப பிரச்சனையில் மனைவியை கட்டையால் அடித்து கொன்ற கணவர்
செம்பனார்கோவில் அருகே குடும்ப பிரச்சனையில் மனைவியை கட்டையால் அடித்து கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.
தரங்கம்பாடி:
நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் அருகே உள்ள கிள்ளியூர் கஞ்சன்திடலை சேர்ந்தவர் விஜயகுமார். கூலி தொழிலாளி. இவரது மனைவி மாரியம்மாள் (வயது 38). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். தற்போது கொரோனா ஊரடங்கால் விஜயகுமாருக்கு போதிய வருமானம் இல்லை.
இதனால் குடும்பத்தில் பிரச்சனை எழுந்து கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இன்று காலை அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்படவே விஜயகுமார் ஆத்திரம் அடைந்து மாரியம்மாளை கட்டையால் சரமாரியாக தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் மாரியம்மாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த செம்பனார் கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தபத்மநாபன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மாரியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்வமனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்தனர்.
நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் அருகே உள்ள கிள்ளியூர் கஞ்சன்திடலை சேர்ந்தவர் விஜயகுமார். கூலி தொழிலாளி. இவரது மனைவி மாரியம்மாள் (வயது 38). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். தற்போது கொரோனா ஊரடங்கால் விஜயகுமாருக்கு போதிய வருமானம் இல்லை.
இதனால் குடும்பத்தில் பிரச்சனை எழுந்து கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இன்று காலை அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்படவே விஜயகுமார் ஆத்திரம் அடைந்து மாரியம்மாளை கட்டையால் சரமாரியாக தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் மாரியம்மாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த செம்பனார் கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தபத்மநாபன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மாரியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்வமனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்தனர்.
Next Story






