என் மலர்
செய்திகள்

கோப்புப்படம்
வேலூரில் மளிகை, காய்கறி விற்பனை நேரம் குறைப்பு
வேலூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் அத்தியாவசியப் பொருள்கள் விற்பனைக்கான நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
வேலூர்:
வேலூரில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு, ஒருவர் உயிரிழந்தார்.
வெளிநாடு, வெளிமாநிலத் தொடர்பு இல்லாத ஒருவர் இந்நோய்த் தொற்றுக்கு உயிரிழந்ததை அடுத்து வேலூர் மாவட்டத்தில் கொரோனா சமூகத் தொற்றாக மாறியிருக்க கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் அத்தியாவசியப் பொருள்கள் விற்பனைக்கான நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மாவட்டத்தில் உள்ள காய்கறிக் கடைகள் அனைத்தும் தினமும் காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மளிகை, சூப்பர் மார்க்கெட், டிபார்ட்மெண்டல் ஸ்டோர் ஆகியவை வாரத்தில் ஞாயிறு, திங்கள், வியாழன், ஆகிய 3 நாள்களில் மட்டும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே திறந்திருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், பெட்ரோல் விற்பனை நிலையங்களும் தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே திறந்திருக்கவும், பால் விற்பனை நிலையங்கள் தினசரி காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே விற்பனை செய்யவும், கோழி, ஆடு, மீன் இறைச்சிக் கடைகள் ஊரடங்கு காலம் முடியும் வரை விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டும் உள்ளது. இந்த உத்தரவு கடந்த வியாழக்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டது.
இதன் காரணமாக வேலூர் மாநகரில் காலை முதலே வெளியில் வாகனங்களில் சென்று வருவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து காணப்பட்டது.
இந்த எண்ணிக்கை 10 மணிக்கு பிறகு முற்றிலுமாக குறைந்து 11 மணிக்கு பிறகு சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.
எனினும், காட்பாடி, காந்திநகர், சத்துவாச்சாரி உள்ளிட்ட சில இடங்களில் வெளியில் சுற்றிக் கொண்டிருந்த ஒரு சில நபர்களையும் வீடுகளுக்கு செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் மற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் எடப்பாடி பகுதி முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மளிகை கடைகள், இறைச்சி, மீன் கடைகள், வியாபார நிறுவனங்கள் என அனைத்தும் மூடப் பட்டுள்ளன. குறிப்பிட்ட நேரம்கூட அந்த கடைகள் திறக்கக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி மற்றும் தம்மம்பட்டி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் வாகனங்களில் கொண்டு சென்று விற்பனை செய்யப்பட்டது. மளிகை பொருட்களும் வீடு வீடாக சென்று வழங்க வேண்டும் என வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
திருச்சி மாநகர் பகுதியில் 2 கிலோ மீட்டர் சுற்றளவு தூரத்துக்கு மேல் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. அவசர நிலை காரணமாக செல்லும் வாகனங்கள் தவிர மற்ற 4 சக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லை.
மேலும் வெளியே வருபவர்கள் ஆதார் அட்டை உள்ளிட்ட அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். இன்று முதல் இது நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் சாலைகளில் கூட்டம் குறைய வாய்ப்புள்ளது.
கடலூரில் பொதுமக்கள் வெளியே செல்ல 3 விதமான அட்டைகள் வழங்கப்படுகின்றன. பச்சை நிற அட்டைகள் வைத்திருப்பவர்கள் திங்கள், வியாழக்கிழமைகளில் வெளியே வரலாம்.
அதேபோல் நீல நிற அட்டை வைத்திருப்பவர்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும், ரோஸ் நிற அட்டைதாரர்கள் புதன் மற்றும் சனிக் கிழமைகளிலும் வெளியே சென்று அத்தியாவசிய பொருட்கள் வாங்கி செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
மற்றவர்கள் வெளியே வந்தால் போலீசார் வாகனங்களை பறிமுதல் செய்கின்றனர். இதனால் கடலூரில் பொதுமக்கள் நடமாட்டம் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேலூரில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு, ஒருவர் உயிரிழந்தார்.
வெளிநாடு, வெளிமாநிலத் தொடர்பு இல்லாத ஒருவர் இந்நோய்த் தொற்றுக்கு உயிரிழந்ததை அடுத்து வேலூர் மாவட்டத்தில் கொரோனா சமூகத் தொற்றாக மாறியிருக்க கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் அத்தியாவசியப் பொருள்கள் விற்பனைக்கான நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மாவட்டத்தில் உள்ள காய்கறிக் கடைகள் அனைத்தும் தினமும் காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மளிகை, சூப்பர் மார்க்கெட், டிபார்ட்மெண்டல் ஸ்டோர் ஆகியவை வாரத்தில் ஞாயிறு, திங்கள், வியாழன், ஆகிய 3 நாள்களில் மட்டும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே திறந்திருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், பெட்ரோல் விற்பனை நிலையங்களும் தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே திறந்திருக்கவும், பால் விற்பனை நிலையங்கள் தினசரி காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே விற்பனை செய்யவும், கோழி, ஆடு, மீன் இறைச்சிக் கடைகள் ஊரடங்கு காலம் முடியும் வரை விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டும் உள்ளது. இந்த உத்தரவு கடந்த வியாழக்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டது.
இதன் காரணமாக வேலூர் மாநகரில் காலை முதலே வெளியில் வாகனங்களில் சென்று வருவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து காணப்பட்டது.
இந்த எண்ணிக்கை 10 மணிக்கு பிறகு முற்றிலுமாக குறைந்து 11 மணிக்கு பிறகு சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.
எனினும், காட்பாடி, காந்திநகர், சத்துவாச்சாரி உள்ளிட்ட சில இடங்களில் வெளியில் சுற்றிக் கொண்டிருந்த ஒரு சில நபர்களையும் வீடுகளுக்கு செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் மற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் எடப்பாடி பகுதி முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மளிகை கடைகள், இறைச்சி, மீன் கடைகள், வியாபார நிறுவனங்கள் என அனைத்தும் மூடப் பட்டுள்ளன. குறிப்பிட்ட நேரம்கூட அந்த கடைகள் திறக்கக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி மற்றும் தம்மம்பட்டி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் வாகனங்களில் கொண்டு சென்று விற்பனை செய்யப்பட்டது. மளிகை பொருட்களும் வீடு வீடாக சென்று வழங்க வேண்டும் என வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
திருச்சி மாநகர் பகுதியில் 2 கிலோ மீட்டர் சுற்றளவு தூரத்துக்கு மேல் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. அவசர நிலை காரணமாக செல்லும் வாகனங்கள் தவிர மற்ற 4 சக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லை.
மேலும் வெளியே வருபவர்கள் ஆதார் அட்டை உள்ளிட்ட அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். இன்று முதல் இது நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் சாலைகளில் கூட்டம் குறைய வாய்ப்புள்ளது.
கடலூரில் பொதுமக்கள் வெளியே செல்ல 3 விதமான அட்டைகள் வழங்கப்படுகின்றன. பச்சை நிற அட்டைகள் வைத்திருப்பவர்கள் திங்கள், வியாழக்கிழமைகளில் வெளியே வரலாம்.
அதேபோல் நீல நிற அட்டை வைத்திருப்பவர்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும், ரோஸ் நிற அட்டைதாரர்கள் புதன் மற்றும் சனிக் கிழமைகளிலும் வெளியே சென்று அத்தியாவசிய பொருட்கள் வாங்கி செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
மற்றவர்கள் வெளியே வந்தால் போலீசார் வாகனங்களை பறிமுதல் செய்கின்றனர். இதனால் கடலூரில் பொதுமக்கள் நடமாட்டம் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story






