என் மலர்
செய்திகள்

கொலை செய்யப்பட்ட தாரைச்செல்வன் பிணமாக கிடக்கும் காட்சி.
விருத்தாசலம் அருகே பனியன் கம்பெனி ஏஜெண்டு அடித்து கொலை
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே நிலத்தகராறில் பனியன் கம்பெனி ஏஜெண்டு அடித்து கொலைசெய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் சரகம் தே. பவழங்குடியை சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (வயது 60.)
இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனிகளுக்கு ஆட்களை அனுப்பும் ஏஜெண்டாக பணிபுரிந்து வந்தார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் கனகராஜ் (40). இவர்கள் இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் உள்ளது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது.
நேற்று இரவு மீண்டும் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது. அப்போது கனகராஜ், அவரது மனைவி செல்வி ஆகியோர் சேர்ந்து தாமரைச்செல்வனை ஆபாசமாக திட்டினர். இதனால் வாக்குவாதம் வலுத்தது.
அப்போது கனகராஜ், அவரது மனைவி செல்வி ஆகியோர் கைகளால் தமிழ்ச்செல்வனை தாக்கினர். இதில் அவர் கீழே சுருண்டு விழுந்தார். இதனை பார்த்த கணவன்-மனைவியும் அங்கிருந்து ஓடிவிட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் அங்கு வந்தனர்.
இதுகுறித்து அவர்கள் கருவேப்பிலங்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தனர்.
அப்போது தாக்குதலில் தமிழ்செல்வன் இறந்துவிட்டது தெரியவந்தது. உடனே அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் விநாயக முருகன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து தலைமறைவான கனகராஜ், அவரது மனைவி செல்வியை தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் சரகம் தே. பவழங்குடியை சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (வயது 60.)
இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனிகளுக்கு ஆட்களை அனுப்பும் ஏஜெண்டாக பணிபுரிந்து வந்தார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் கனகராஜ் (40). இவர்கள் இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் உள்ளது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது.
நேற்று இரவு மீண்டும் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது. அப்போது கனகராஜ், அவரது மனைவி செல்வி ஆகியோர் சேர்ந்து தாமரைச்செல்வனை ஆபாசமாக திட்டினர். இதனால் வாக்குவாதம் வலுத்தது.
அப்போது கனகராஜ், அவரது மனைவி செல்வி ஆகியோர் கைகளால் தமிழ்ச்செல்வனை தாக்கினர். இதில் அவர் கீழே சுருண்டு விழுந்தார். இதனை பார்த்த கணவன்-மனைவியும் அங்கிருந்து ஓடிவிட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் அங்கு வந்தனர்.
இதுகுறித்து அவர்கள் கருவேப்பிலங்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தனர்.
அப்போது தாக்குதலில் தமிழ்செல்வன் இறந்துவிட்டது தெரியவந்தது. உடனே அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் விநாயக முருகன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து தலைமறைவான கனகராஜ், அவரது மனைவி செல்வியை தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story






