என் மலர்
செய்திகள்

கோப்பு படம்
தி.மு.க. முன்னாள் நகர செயலாளர் மீது வழக்கு மனைவி புகார்
வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் சொத்தை அபகரித்ததாகவும் திமுக முன்னாள் நகர செயலாளர் மீது அவரது மனைவி புகார் அளித்துள்ளார்.
வாணியம்பாடி:
வாணியம்பாடி நகர தி.மு.க. முன்னாள் செயலாளர் சாரதிகுமார். காஞ்சிபுரத்தை சேர்ந்த இவரது மனைவி ரம்யா (வயது28).வாணியம்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சாரதிகுமார் மீது ரம்யா புகார் அளித்தார்.
எனக்கும், வாணியம்பாடியை சேர்ந்த சாரதிகுமாருக்கும், கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 140 பவுன் தங்க நகைகள், திருமண சீர்வரிசை பொருட்களாக ரூ.5 லட்சம் ரூபாய்க்கும், திருமண செலவுக்காக ரூ.15 லட்சம் ரொக்கமாக கொடுத்தனர்.
எங்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. திருமணம் முடித்து நானும், கணவரும் வாணியம்பாடியில் உள்ள மாமியார் வீட்டில் வாழ்ந்து வந்தோம். எனது கணவர் சேலத்தில் தனியார் கல்லூரியில் படித்த போது சத்யாபிரியா என்பவரிடம் பழகியுள்ளார். அவரது வீட்டிற்கு என்னையும் அழைத்து சென்றுள்ளார். அவரை (சத்யாபிரியாவை) என்னிடம் அக்கா என்று முதலில் கூறினார்.
நான் கர்ப்பமாக இருந்த போது என் கணவர் என்னிடம் சரியாக பேசாமல் சத்யபிரியாவிடம் நெருங்கி பேசி வந்தது தெரிந்தது. நான் கேட்ட போது என்னை அசிங்கமாக திட்டி அடித்தார். இந்த நிலையில் எனது கர்ப்பம் கலைந்து விட்டது.
அந்த பெண்ணிடம் பழகி வருவது எனக்கு தெரிந்து விட்டதால் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து சண்டை போடுவார். சத்யாபிரியாவுடன் சேர்ந்து ஒன்றாக வாழலாம் என கட்டாயப்படுத்துவார்.
அதற்கு பிறகு 2-வது முறையாக கர்ப்பமாகி பெண் குழந்தை 2017-ம் ஆண்டு பிறந்தது. பிரசவத்திற்காக நான் காஞ்சிபுரத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கு வந்து என்னையும் எனது குழந்தையும் பார்க்காமல் சேலம் சென்று அந்த பெண்ணிடமே இருந்து வந்தார்.
இதனால் எனக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு அதிகமாக ஏற்பட்டது. காஞ்சிபுரத்தில் இருந்து வாணியம்பாடிக்கு வந்தேன். வந்த பிறகும் என்னையும், குழந்தையும் கவனிக்காமல் இருந்து வந்தார். மாறாக சத்யா பிரியாவை வாணியம்பாடி வீட்டிற்கு அழைத்து வந்து வைத்திருந்தார்.
இதனை நான் மாமியாரிடம் கேட்ட போது என் மாமியாரும், நீ உன் கணவருடன் விருப்பம் இருந்தால் வாழு, இல்லையென்றால் தற்கொலை செய்துக்கொள் என்று மிரட்டினார்.
அப்படி செய்து கொள்ளவில்லை என்றால் குழந்தையை கொன்று விடுவேன் என்று மிரட்டினார்கள். நான் குழந்தைக்கு ஆபத்து வந்துவிடுமோ என பயந்து வீட்டிலிருந்த பழைய மாத்திரைகளை சாப்பிட்டு விட்டேன்.
பின்னர் என்னை மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள். சிகிச்சை முடிந்து நான் எனது பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்தேன்.
சில நாட்கள் கழித்து மீண்டும் குழந்தையுடன் வாணியம்பாடிக்கு வந்த போது என் கணவரும் மாமியாரும் சரிவர பேசாமல், அசிங்கமாக திட்டினார்கள். இதனால் வேதனை தாங்காமல் மீண்டும் தாய்வீட்டிற்கு வந்துவிட்டேன்.
இந்நிலையில் சத்யா பிரியாவின் அக்கா மகள் ஒருவரையும் எனது கணவரிடம் தொடர்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளார்கள்.
என்னை திருமணம் செய்து ஒரு குழந்தைக்கு தாய் ஆக்கிவிட்டு என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய எனது கணவர் மீதும், அவரது தாயார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருமணத்தின் போது போடப்பட்ட நகை, சீர்வரிசை, வெள்ளி பொருட்கள், பணம் ஆகியவற்றை பெற்றுதர வேண்டும் என்று புகார் கூறியுள்ளார்.
இந்த புகாரின் பேரில் வாணியம்பாடி அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி பெண் கொடுமை சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
வாணியம்பாடி செட்டியப்பனூரை சேர்ந்த சவுந்தரராஜன் என்பவர் சாரதிகுமார் உள்பட 4 பேர் மீது மனநலம் பாதித்த யோகாம்பாள் (வயது42) என்ற பெண்ணின் சொத்துக்களை அபகரித்து விற்றதாக திருப்பத்தூர் எஸ்.பி. ஆபீசில் புகார் செய்தார்.
இந்த புகாரின் மீது வாணியம்பாடி தாலுகா போலீசார் சாரதிகுமார் உள்பட 4 பேர் மீது 6 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணியம்பாடி முன்னாள் தி.மு.க. நகர செயலாளர் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாணியம்பாடி நகர தி.மு.க. முன்னாள் செயலாளர் சாரதிகுமார். காஞ்சிபுரத்தை சேர்ந்த இவரது மனைவி ரம்யா (வயது28).வாணியம்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சாரதிகுமார் மீது ரம்யா புகார் அளித்தார்.
எனக்கும், வாணியம்பாடியை சேர்ந்த சாரதிகுமாருக்கும், கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 140 பவுன் தங்க நகைகள், திருமண சீர்வரிசை பொருட்களாக ரூ.5 லட்சம் ரூபாய்க்கும், திருமண செலவுக்காக ரூ.15 லட்சம் ரொக்கமாக கொடுத்தனர்.
எங்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. திருமணம் முடித்து நானும், கணவரும் வாணியம்பாடியில் உள்ள மாமியார் வீட்டில் வாழ்ந்து வந்தோம். எனது கணவர் சேலத்தில் தனியார் கல்லூரியில் படித்த போது சத்யாபிரியா என்பவரிடம் பழகியுள்ளார். அவரது வீட்டிற்கு என்னையும் அழைத்து சென்றுள்ளார். அவரை (சத்யாபிரியாவை) என்னிடம் அக்கா என்று முதலில் கூறினார்.
நான் கர்ப்பமாக இருந்த போது என் கணவர் என்னிடம் சரியாக பேசாமல் சத்யபிரியாவிடம் நெருங்கி பேசி வந்தது தெரிந்தது. நான் கேட்ட போது என்னை அசிங்கமாக திட்டி அடித்தார். இந்த நிலையில் எனது கர்ப்பம் கலைந்து விட்டது.
அந்த பெண்ணிடம் பழகி வருவது எனக்கு தெரிந்து விட்டதால் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து சண்டை போடுவார். சத்யாபிரியாவுடன் சேர்ந்து ஒன்றாக வாழலாம் என கட்டாயப்படுத்துவார்.
அதற்கு பிறகு 2-வது முறையாக கர்ப்பமாகி பெண் குழந்தை 2017-ம் ஆண்டு பிறந்தது. பிரசவத்திற்காக நான் காஞ்சிபுரத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கு வந்து என்னையும் எனது குழந்தையும் பார்க்காமல் சேலம் சென்று அந்த பெண்ணிடமே இருந்து வந்தார்.
இதனால் எனக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு அதிகமாக ஏற்பட்டது. காஞ்சிபுரத்தில் இருந்து வாணியம்பாடிக்கு வந்தேன். வந்த பிறகும் என்னையும், குழந்தையும் கவனிக்காமல் இருந்து வந்தார். மாறாக சத்யா பிரியாவை வாணியம்பாடி வீட்டிற்கு அழைத்து வந்து வைத்திருந்தார்.
இதனை நான் மாமியாரிடம் கேட்ட போது என் மாமியாரும், நீ உன் கணவருடன் விருப்பம் இருந்தால் வாழு, இல்லையென்றால் தற்கொலை செய்துக்கொள் என்று மிரட்டினார்.
அப்படி செய்து கொள்ளவில்லை என்றால் குழந்தையை கொன்று விடுவேன் என்று மிரட்டினார்கள். நான் குழந்தைக்கு ஆபத்து வந்துவிடுமோ என பயந்து வீட்டிலிருந்த பழைய மாத்திரைகளை சாப்பிட்டு விட்டேன்.
பின்னர் என்னை மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள். சிகிச்சை முடிந்து நான் எனது பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்தேன்.
சில நாட்கள் கழித்து மீண்டும் குழந்தையுடன் வாணியம்பாடிக்கு வந்த போது என் கணவரும் மாமியாரும் சரிவர பேசாமல், அசிங்கமாக திட்டினார்கள். இதனால் வேதனை தாங்காமல் மீண்டும் தாய்வீட்டிற்கு வந்துவிட்டேன்.
இந்நிலையில் சத்யா பிரியாவின் அக்கா மகள் ஒருவரையும் எனது கணவரிடம் தொடர்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளார்கள்.
என்னை திருமணம் செய்து ஒரு குழந்தைக்கு தாய் ஆக்கிவிட்டு என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய எனது கணவர் மீதும், அவரது தாயார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருமணத்தின் போது போடப்பட்ட நகை, சீர்வரிசை, வெள்ளி பொருட்கள், பணம் ஆகியவற்றை பெற்றுதர வேண்டும் என்று புகார் கூறியுள்ளார்.
இந்த புகாரின் பேரில் வாணியம்பாடி அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி பெண் கொடுமை சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
வாணியம்பாடி செட்டியப்பனூரை சேர்ந்த சவுந்தரராஜன் என்பவர் சாரதிகுமார் உள்பட 4 பேர் மீது மனநலம் பாதித்த யோகாம்பாள் (வயது42) என்ற பெண்ணின் சொத்துக்களை அபகரித்து விற்றதாக திருப்பத்தூர் எஸ்.பி. ஆபீசில் புகார் செய்தார்.
இந்த புகாரின் மீது வாணியம்பாடி தாலுகா போலீசார் சாரதிகுமார் உள்பட 4 பேர் மீது 6 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணியம்பாடி முன்னாள் தி.மு.க. நகர செயலாளர் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story






