என் மலர்
செய்திகள்

கடலூர் முதுநகர் மீன் மார்க்கெட்டில் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கடலூர் மார்க்கெட்டுகளில் சோதனை- 100 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்
கடலூர் திருப்பாதிரிப்புலியூர், முதுநகர் மீன் மார்க்கெட் வெளிப்புறத்தில் விற்கப்பட்ட மீன்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் 100 கிலோ கெட்டுப்போன மீன்கள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
கடலூர்:
தமிழகம் முழுவதும் மீன் மார்க்கெட்டில் விற்ககூடிய மீன்களில் பார்மலின் என்கிற ரசாயனம் கலந்து விற்கப்படுகிறதா? எனஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும் படி அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி கடலூர் மஞ்சகுப்பம், திருப்பாதிரிப்புலியூர் மற்றும் முதுநகர் பகுதியில் இன்று காலை மீன்வளத்துறை இணை இயக்குனர் காத்தவராயன், உதவி இயக்குனர் ரம்யா லட்சுமி, கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சுகுந்தன் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மீன் மார்க்கெட்டுகளில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
அங்கு விற்கப்படும் மீன்களில் பார்மலின் ரசாயனம் கலக்கப்பட்டுள்ளதா? கெட்டு போன மீன்கள் உள்ளதா? என்று சோதனை செய்தனர்.
மேலும் கடலூர் திருப்பாதிரிப்புலியூர், முதுநகர் மீன் மார்க்கெட் வெளிப்புறத்தில் விற்கப்பட்ட மீன்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் 100 கிலோ கெட்டுப்போன மீன்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.
இதனைத்தொடர்ந்து கெட்டுப்போன மீன்களை கைப்பற்றி அதனை அப்புறப்படுத்தினர். இதையடுத்து மீன் விற்கும் நபர்களை கடுமையாக கண்டித்தனர். இதுபோன்ற மீன்கள் விற்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
இந்த சம்பவத்தால் கடலூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் மீன் மார்க்கெட்டில் விற்ககூடிய மீன்களில் பார்மலின் என்கிற ரசாயனம் கலந்து விற்கப்படுகிறதா? எனஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும் படி அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி கடலூர் மஞ்சகுப்பம், திருப்பாதிரிப்புலியூர் மற்றும் முதுநகர் பகுதியில் இன்று காலை மீன்வளத்துறை இணை இயக்குனர் காத்தவராயன், உதவி இயக்குனர் ரம்யா லட்சுமி, கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சுகுந்தன் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மீன் மார்க்கெட்டுகளில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
அங்கு விற்கப்படும் மீன்களில் பார்மலின் ரசாயனம் கலக்கப்பட்டுள்ளதா? கெட்டு போன மீன்கள் உள்ளதா? என்று சோதனை செய்தனர்.
மேலும் கடலூர் திருப்பாதிரிப்புலியூர், முதுநகர் மீன் மார்க்கெட் வெளிப்புறத்தில் விற்கப்பட்ட மீன்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் 100 கிலோ கெட்டுப்போன மீன்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.
இதனைத்தொடர்ந்து கெட்டுப்போன மீன்களை கைப்பற்றி அதனை அப்புறப்படுத்தினர். இதையடுத்து மீன் விற்கும் நபர்களை கடுமையாக கண்டித்தனர். இதுபோன்ற மீன்கள் விற்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
இந்த சம்பவத்தால் கடலூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story






