என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாப்பாத்தியம்மாளுடன் செல்பி எடுத்து மகிழ்ந்த மு.க.ஸ்டாலின்.
    X
    பாப்பாத்தியம்மாளுடன் செல்பி எடுத்து மகிழ்ந்த மு.க.ஸ்டாலின்.

    மூதாட்டி பாப்பாத்தி மரணம்- மு.க.ஸ்டாலின் இரங்கல்

    ஈரோட்டை சேர்ந்த மூதாட்டி பாப்பாத்தியின் மறைவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு கள்ளுக்கடை மேடு ராஜாஜி வீதியை சேர்ந்தவர் மூதாட்டி பாப்பாத்தி (வயது 75).

    தி.மு.க. மீதும் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் மீதும் மிகுந்த பற்று கொண்டவர். ஆனால் அவர் கட்சியில் ஒரு உறுப்பினர் கூட கிடையாது.

    சிறந்த தமிழ் ஆர்வலரான பாப்பாத்திக்கு கருணாநிதியின் தமிழ் மற்றும் மு.க.ஸ்டாலினின் அணுகுமுறை பேச்சாற்றலில் ஈர்க்கப்பட்டவர்.

    ஈரோடு மாவட்டத்தில் முன்பு கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயண நிகழ்ச்சியில் தவறாமல் கலந்து கொள்வார்.

    கடந்த 2008-ம் ஆண்டு பாப்பாத்தி தன்னந்தனியாக தனது சொந்த செலவில் சென்னை சென்று மு.க.ஸ்டாலினை சந்தித்தார். மேலும் அப்போதைய தி.மு.க.தலைவர் கருணாநிதியையும் சந்தித்தார். தி.மு.க. மீது பற்று கொண்ட பாப்பாத்தியுடன் மு.க.ஸ்டாலின் ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தார்.

    இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக பாப்பாத்தி நேற்று திடீர் மரணம் அடைந்தார். இது பற்றி தகவல் அறிந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வருத்தம் அடைந்தார். பாப்பாத்தி மறைவுக்கு இரங்கலும் தெரிவித்தார்.

    அவர் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில், “பாப்பாத்தி மறைவு செய்தி எனக்கு வேதனை அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்து கொள்கிறேன்” என்று கூறி உள்ளார்.

    இந்த நிலையில் நேற்று ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான முத்துசாமி தலைமையில் ஏராளமான தி.மு.க.வினர் பாப்பாத்தி வீட்டுக்கு சென்று அவரது உடலுக்கு தி.மு.க. கொடி போர்த்தி மாலை போட்டு அஞ்சலி செலுத்தினர்.

    Next Story
    ×