search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலியோ சொட்டு மருந்து
    X
    போலியோ சொட்டு மருந்து

    செங்கல்பட்டு மாவட்டத்தில் 19-ந் தேதி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து- கலெக்டர் தகவல்

    செங்கல்பட்டு மாவட்டத்தில் 1675 மையங்களில் சுமார் 2.67 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    சென்னை:

    போலியோ சொட்டு மருந்து வழங்கும் ஒருங்கிணைப்பு கூட்டம் செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி கூட்டரங்கில் கலெக்டர் ஜான் லூயிஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    தமிழகம் முழுவதும் வரும் 19ம் தேதி போலியோ சொட்டு மருந்து  முகாமை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் 1675 மையங்களில் சுமார் 2,67,158 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் இந்த போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

    இந்த முகாமில் பொது சுகாதாரத் துறை பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள் மற்றும் சுய உதவிக் குழுவினர்கள் ஆக மொத்தம் 5,450 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள், திருவிழா நடைபெறும் இடங்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்கா ஆகிய இடங்களில் தனியாக முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு வரும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் வெளி மாநிலங்களில் இருந்து கட்டுமான பணிக்காக வந்துள்ள பணியாளர்களின் குழந்தைகளின் எண்ணிக்கை தனியாக கணக்கிடப்பட்டு அவர்களுக்கும் 54 சிறப்பு நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    எனவே பொதுமக்கள் ஏற்கனவே சொட்டு மருந்து வழங்கப்பட்டு இருப்பினும் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கி போலியோ என்னும் இளம்பிள்ளை வாத நோயை முற்றிலும் ஒழித்திட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×