என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கப்பலின் பாகம் கடற்கரையில் ஒதுங்கியதால் பரபரப்பு
Byமாலை மலர்7 Dec 2019 3:34 AM GMT (Updated: 7 Dec 2019 3:34 AM GMT)
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே கப்பலின் பாகம் கடற்கரையில் ஒதுங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே சி.புதுப்பேட்டை கடற்கரை பகுதியில் நேற்று காலை ஏதோ ஒரு ராட்சத பொருள் கடல் நீரில் மிதப்பதை அந்த பகுதி மீனவர்கள் பார்த்தனர். உடன் அங்கிருந்தவர்கள் சிறிய வகை படகில் உள்ளே சென்று அதை கரைக்கு கயிறுகட்டி இழுத்து வந்தனர். அது, கப்பலில் இருக்கும் கண்டெய்னர் ஏர்கூலர் பாகம் என்பது தெரியவந்தது.
தற்போது கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வந்ததால், ஆழ்கடல் பகுதியில் இருந்து கரைக்கு அடித்து வந்து இருக்கலாம் என்று மீனவர்கள் தெரிவித்தனர். இது பற்றி தகவல் அறிந்த கடலோர காவல் குழும போலீசார் சி.புதுப்பேட்டை கடற்கரை பகுதிக்கு வந்தனர். அங்கு கரை ஒதுங்கி கிடந்த பாகத்தை பார்வையிட்ட அவர்கள், இது ஏதேனும் கப்பலில் இருந்து விழுந்து இருக்கலாம் என்று தெரிவித்தனர்.
மேலும் கப்பலின் பாகத்தை அங்கிருந்து லாரியில் ஏற்றி, கடலூருக்கு எடுத்து வந்தனர். இது தொடர்பாக கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே சி.புதுப்பேட்டை கடற்கரை பகுதியில் நேற்று காலை ஏதோ ஒரு ராட்சத பொருள் கடல் நீரில் மிதப்பதை அந்த பகுதி மீனவர்கள் பார்த்தனர். உடன் அங்கிருந்தவர்கள் சிறிய வகை படகில் உள்ளே சென்று அதை கரைக்கு கயிறுகட்டி இழுத்து வந்தனர். அது, கப்பலில் இருக்கும் கண்டெய்னர் ஏர்கூலர் பாகம் என்பது தெரியவந்தது.
தற்போது கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வந்ததால், ஆழ்கடல் பகுதியில் இருந்து கரைக்கு அடித்து வந்து இருக்கலாம் என்று மீனவர்கள் தெரிவித்தனர். இது பற்றி தகவல் அறிந்த கடலோர காவல் குழும போலீசார் சி.புதுப்பேட்டை கடற்கரை பகுதிக்கு வந்தனர். அங்கு கரை ஒதுங்கி கிடந்த பாகத்தை பார்வையிட்ட அவர்கள், இது ஏதேனும் கப்பலில் இருந்து விழுந்து இருக்கலாம் என்று தெரிவித்தனர்.
மேலும் கப்பலின் பாகத்தை அங்கிருந்து லாரியில் ஏற்றி, கடலூருக்கு எடுத்து வந்தனர். இது தொடர்பாக கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X