என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காட்பாடி மாரியம்மன் கோவிலில் கொள்ளைபோன 108 கிலோ ஐம்பொன் சிலை மீட்பு
Byமாலை மலர்22 Nov 2019 9:19 AM GMT (Updated: 22 Nov 2019 9:19 AM GMT)
வேலூர் மாவட்டம் காட்பாடி மாரியம்மன் கோவிலில் கொள்ளை போன 108 கிலோ ஐம்பொன் சிலை தண்டவாளம் அருகே மீட்கப்பட்டது.
வேலூர்:
காட்பாடி வள்ளிமலை சாலையில் வி.டி.கே. நகரில் மாரியம்மன் கோவில் உள்ளது. 50 ஆண்டு பழமையான இந்த கோவிலில் 30 ஆண்டுக்கு முன்பு 108 கிலோ ஐம்பொன் அம்மன் சிலை செய்து வைத்தனர்.
கடந்த 14-ந்தேதி இரவு கோவிலுக்குள் புகுந்த மர்ம கும்பல் அங்கிருந்த 108 கிலோ ஐம்பொன் சிலையை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
காட்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகைகள் சேகரிக்கப்பட்டது.
கொள்ளை கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகே கொள்ளை போன 108 கிலோ ஐம்பொன் சிலையை திருட்டு கும்பல் வீசி சென்றுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த காட்பாடி போலீசார் சிலையை மீட்டு கோவில் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர். ஐம்பொன் சிலை கிடைத்த மகிழ்ச்சியில் பொதுமக்கள் பரவசமடைந்தனர்.
ஐம்பொன் சிலையை கொள்ளையடித்து தண்டவாளத்தில் வீசி சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்பாடி வள்ளிமலை சாலையில் வி.டி.கே. நகரில் மாரியம்மன் கோவில் உள்ளது. 50 ஆண்டு பழமையான இந்த கோவிலில் 30 ஆண்டுக்கு முன்பு 108 கிலோ ஐம்பொன் அம்மன் சிலை செய்து வைத்தனர்.
கடந்த 14-ந்தேதி இரவு கோவிலுக்குள் புகுந்த மர்ம கும்பல் அங்கிருந்த 108 கிலோ ஐம்பொன் சிலையை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
காட்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகைகள் சேகரிக்கப்பட்டது.
கொள்ளை கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகே கொள்ளை போன 108 கிலோ ஐம்பொன் சிலையை திருட்டு கும்பல் வீசி சென்றுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த காட்பாடி போலீசார் சிலையை மீட்டு கோவில் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர். ஐம்பொன் சிலை கிடைத்த மகிழ்ச்சியில் பொதுமக்கள் பரவசமடைந்தனர்.
ஐம்பொன் சிலையை கொள்ளையடித்து தண்டவாளத்தில் வீசி சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X