search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நளினி
    X
    நளினி

    மாமனாருக்கு உடல்நிலை பாதிப்பு- நளினி மீண்டும் 1 மாதம் பரோல் கேட்டு மனு

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி மீண்டும் ஒரு மாதம் பரோல் கேட்டு வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதியிடம் மனு அளித்துள்ளார்.
    வேலூர்:

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதில் முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும் அவரது மனைவி நளினி வேலூர் பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

    நளினி மகள் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்ய 51 நாட்கள் பரோலில் வந்தார். மேலும் பரோலை நீட்டிக்க மனு செய்திருந்தார். ஆனால் ஐகோர்ட்டு அவரது பரோலை நீட்டிக்கவில்லை. பின்னர் செப்டம்பர் 15-ந்தேதி பரோல் முடிந்து வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் நளினி மீண்டும் ஒரு மாதம் பரோல் கேட்டு வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதியிடம் மனு அளித்துள்ளார்.

    இலங்கையில் உள்ள முருகனின் தந்தை நளினியின் மாமனார் உடல்நலக்குறைவாக உள்ளார். அவர் சிகிச்சை பெறுவதற்காக தமிழகத்திற்கு விரைவில் வர உள்ளார். அவர் சிகிச்சை பெறும் காலத்தில் அவருடன் துணையாக இருக்க ஒரு மாதம் பரோல் கேட்டு உள்ளார் என்றனர்.
    Next Story
    ×