search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பவானிசாகர் அணை (கோப்புப்படம்)
    X
    பவானிசாகர் அணை (கோப்புப்படம்)

    பவானிசாகர் அணைக்கு மேலும் நீர்வரத்து அதிகரிப்பு

    நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கணிசமான மழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    சத்தியமங்கலம்:

    பவானிசாகர் அணைக்கு கடந்த 2 நாட்களாகவே நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கணிசமான மழையால் இந்த நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 3981 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பாசனத்துக்காக வாய்க்கால்களில் மொத்தமாக 2700 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 95.83 அடியாக உள்ளது.

    நேற்று இரவு ஈரோடு மாவட்டத்தில் பவானி (18 மி.மீ), தாளவாடி(9 மி.மீ), அம்மாபேட்டை (7 மி.மீ), கோபி (1 மி.மீ.) ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

    Next Story
    ×