என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிரியை தாக்கியதில் மாணவர் காதில் ரத்தம் வடிந்தது.
    X
    ஆசிரியை தாக்கியதில் மாணவர் காதில் ரத்தம் வடிந்தது.

    குன்னூர் தனியார் பள்ளியில் மாணவரை தாக்கிய ஆசிரியை சஸ்பெண்டு

    குன்னூரில் தனியார் பள்ளியில் மாணவரை தாக்கிய ஆசிரியை சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊட்டி:

    குன்னூர் ரெய்லி காம்பவுண்ட் பகுதியில் வசித்து வருபவர் சாதிக். இவரது மகன் சாகின் (5). இவர் பெட்போர்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் யூ.கே.ஜி. படித்து வருகிறார். சம்பவத்தன்று வகுப்பாசிரியை வெண்டி அனைத்து மாணவர்களுக்கும் பென்சில்களை வழங்கினார்.

    பென்சிலை உடைக்காமல் திரும்ப கொடுக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் சாகினுக்கு கொடுக்கப்பட்ட பென்சில் ஏற்கனவே உடைந்துள்ளதாக வகுப்பாசிரியை வெண்டியிடம் சிறுவன் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் சாகினை தாக்கினார். இதில் சிறுவனின் காதில் இருந்து ரத்தம் வடிந்துள்ளது. பள்ளியில் இருந்து வீடு திரும்பிய சிறுவன் தனக்கு காது வலிப்பதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

    பின்னர் சாகின், குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர் . பின்னர் மேல் சிகிச்சைக்காக மாணவரை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நேற்று சேர்த்தனர்.

    இதுகுறித்து மேல் குன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் பள்ளி நிர்வாகத்தினர் வகுப்பாசிரியை வெண்டியை பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.
    Next Story
    ×