search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாக்டர்கள் வேலைநிறுத்தம்
    X
    டாக்டர்கள் வேலைநிறுத்தம்

    கடலூர் மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் வேலைநிறுத்தம்

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கடலூர்:

    காலம் சார்ந்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும், மருத்துவ பட்டமேற்படிப்புகளில் அரசு மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசு டாக்டர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.

    இந்த நிலையில் இன்று(செவ்வாய்க்கிழமை) தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளனர்.

    கடலூர் , விருத்தாசலம், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், வேப்பூர், புவனகிரி, குறிஞ்சிப்பாடி ஆகிய பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் டாக்டர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதையடுத்து அவசர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுகளில் ஒரு சில டாக்டர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இந்த போராட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

    இதனால் மருத்துவ சேவைகள் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர்.
    Next Story
    ×