என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பவானிசாகர் அணை வேகமாக நிரம்புகிறது
Byமாலை மலர்7 Aug 2019 4:46 AM GMT (Updated: 7 Aug 2019 4:46 AM GMT)
கடந்த 10 தினங்களுக்கு முன் 52 அடியாக இருந்த பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 9 மணி நிலவரப்படி 66.75 அடியாக உள்ளது. இன்று மதியம் 67 அடியை எட்டிவிடும்.
சத்தியமங்கலம்:
120அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையில் 15 அடி சேறும், சகதியும் கொண்டது. 105 அடிக்கு தண்ணீரை சேமித்து வைக்கலாம்.
கடந்த ஆண்டு இதே நாளில் தென்மேற்கு பருவமழை பலமாக கொட்டி அணை நிரம்பியது. ஆனால் இந்த ஆண்டு எதிர்பார்த்த மழை இல்லை. எனினும் கடந்த 3 நாட்களாக தற்போது அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலையில் பலத்த மழை கொட்டி வருகிறது.
இந்த மழையாலும் மேலும் நீலகிரியில் உள்ள பில்லூர் அணை நிரம்பி உள்ள நிலையில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாலும் பவானி சாகர் அணைக்கு கடந்த சில நாட்களாக அதிகளவில் நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.
நேற்று இரவு வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இது இன்று காலை 9 மணியளவில் சிறிது குறைந்தது.
எனினும் அணைக்கு வினாடிக்கு 8660 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர் மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.
கடந்த 10 தினங்களுக்கு முன் 52 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 9 மணி நிலவரப்படி 66.75 அடியாக உள்ளது. இன்று மதியம் 67 அடியை எட்டிவிடும்.
அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரிப்பால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
120அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையில் 15 அடி சேறும், சகதியும் கொண்டது. 105 அடிக்கு தண்ணீரை சேமித்து வைக்கலாம்.
கடந்த ஆண்டு இதே நாளில் தென்மேற்கு பருவமழை பலமாக கொட்டி அணை நிரம்பியது. ஆனால் இந்த ஆண்டு எதிர்பார்த்த மழை இல்லை. எனினும் கடந்த 3 நாட்களாக தற்போது அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலையில் பலத்த மழை கொட்டி வருகிறது.
இந்த மழையாலும் மேலும் நீலகிரியில் உள்ள பில்லூர் அணை நிரம்பி உள்ள நிலையில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாலும் பவானி சாகர் அணைக்கு கடந்த சில நாட்களாக அதிகளவில் நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.
நேற்று இரவு வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இது இன்று காலை 9 மணியளவில் சிறிது குறைந்தது.
எனினும் அணைக்கு வினாடிக்கு 8660 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர் மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.
கடந்த 10 தினங்களுக்கு முன் 52 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 9 மணி நிலவரப்படி 66.75 அடியாக உள்ளது. இன்று மதியம் 67 அடியை எட்டிவிடும்.
அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரிப்பால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X