search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீரன் சின்னமலை
    X
    தீரன் சின்னமலை

    தீரன் சின்னமலை நினைவு நாள்- ஈரோட்டுக்கு நாளை 10 அமைச்சர்கள் வருகை

    சுதந்திர போராட்ட மாவீரர் தீரன் சின்னமலை நினைவு தினம் நாளை கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த 10 அமைச்சர்கள் நாளை ஈரோடு வருகிறார்கள்.
    ஈரோடு:

    சுதந்திர போராட்ட மாவீரர் தீரன் சின்னமலை நினைவு தினம் நாளை (சனிக்கிழமை) கடைப்பிடிக்கப்படுகிறது.

    ஈரோடு அடுத்த அரச்சலூர் ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் நாளை காலை இந்த நிகழ்ச்சி நடக்கிறது. தமிழக அரசு சார்பில் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

    அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன், சரோஜா, உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய 10 அமைச்சர்கள் கலந்து கொண்டு தீரன்சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்கள்.

    மேலும் விழாவில் எம்.எல்.ஏ.க்கள் தோப்பு வெங்கடாச்சலம், கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, சிவசுப்பிரமணி, ராஜாகிருஷ்ணன், ஈஸ்வரன், கணேச மூர்த்தி எம்.பி.யும் கலந்து கொள்கிறார்கள்.

    முன்னதாக மாவட்ட கலெக்டர் கதிரவன் வரவேற்று பேசுகிறார்.

    இதே போல் தி.மு.க. சார்பில் நடக்கும் நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு அரச்சலூர் ஓடாநிலையில் உள்ள தீரன்சின்னமலை மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.

    இந்த நிகழ்ச்சி நாளை பிற்பகல் 12 மணிக்கு நடக்கிறது. ஈரோடு வரும் உதயநிதி ஸ்டாலினை வரவேற்க தி.மு.க. அனைத்து அணியினரும், தொண்டர்களும் திரண்டு வர வேண்டும் என முன்னாள் அமைச்சரும், ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான முத்துசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

    மேலும் தீரன் சின்னமலை நினைவு தினத்தில் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் மற்றும் கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் உள்பட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் பங்கேற்று தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.
    Next Story
    ×