என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகளின் திருமண ஏற்பாட்டில் நளினி தீவிரம்
Byமாலை மலர்30 July 2019 6:05 AM GMT (Updated: 30 July 2019 6:05 AM GMT)
சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் 5-ம் நாளான இன்று காலை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வந்து கையெழுத்திட்ட நளினி, மகளின் திருமண ஏற்பாட்டில் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
வேலூர்:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், நளினி, பேரறிவாளன் உள்பட 7 பேர் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதில் வேலூர் பெண்கள் தனிச்சிறையில் இருந்த நளினியின் கோரிக்கையை ஏற்று அவரது மகள் திருமண ஏற்பாட்டிற்காக சென்னை ஐகோர்ட் அவருக்கு 30 நாள் பரோல் வழங்கியது.
கடந்த 25-ந் தேதி பரோலில் வந்த நளினி சத்துவாச்சாரி புலவர் நகரில் உள்ள திராவிடர் இயக்க தமிழர் பேரவை நிர்வாகி வீட்டில் தங்கியுள்ளார். கோர்ட்டு உத்தரவுப்படி தினமும் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் நளினி கையெழுத்திட்டு வருகிறார்.
அதன்படி, 5-ம் நாளான இன்று காலை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்திற்கு வந்து கையெழுத்திட்டார்.
இந்நிலையில், கடந்த 27-ந் தேதி இரவு சென்னையில் இருந்து வந்திருந்த அவரது தம்பி பாக்கியநாதனிடம் மகளின் திருமண ஏற்பாடுகள் குறித்து நளினி தீவிரமாக ஆலோசித்துள்ளார்.
கோர்ட் உத்தரவுப்படி வேலூர் சிறையில் நளினி முருகன் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து பேசி வருகின்றனர். அதன்படி, வரும் 3-ந் தேதி வேலூர் சிறையில் முருகனை சந்திக்கிறார்.
அப்போது மகள் ஹரித்ராவின் திருமணம் குறித்து ஆலோசிக்க திட்டமிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், நளினி, பேரறிவாளன் உள்பட 7 பேர் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதில் வேலூர் பெண்கள் தனிச்சிறையில் இருந்த நளினியின் கோரிக்கையை ஏற்று அவரது மகள் திருமண ஏற்பாட்டிற்காக சென்னை ஐகோர்ட் அவருக்கு 30 நாள் பரோல் வழங்கியது.
கடந்த 25-ந் தேதி பரோலில் வந்த நளினி சத்துவாச்சாரி புலவர் நகரில் உள்ள திராவிடர் இயக்க தமிழர் பேரவை நிர்வாகி வீட்டில் தங்கியுள்ளார். கோர்ட்டு உத்தரவுப்படி தினமும் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் நளினி கையெழுத்திட்டு வருகிறார்.
அதன்படி, 5-ம் நாளான இன்று காலை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்திற்கு வந்து கையெழுத்திட்டார்.
இந்நிலையில், கடந்த 27-ந் தேதி இரவு சென்னையில் இருந்து வந்திருந்த அவரது தம்பி பாக்கியநாதனிடம் மகளின் திருமண ஏற்பாடுகள் குறித்து நளினி தீவிரமாக ஆலோசித்துள்ளார்.
கோர்ட் உத்தரவுப்படி வேலூர் சிறையில் நளினி முருகன் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து பேசி வருகின்றனர். அதன்படி, வரும் 3-ந் தேதி வேலூர் சிறையில் முருகனை சந்திக்கிறார்.
அப்போது மகள் ஹரித்ராவின் திருமணம் குறித்து ஆலோசிக்க திட்டமிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X