search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நளினி
    X
    நளினி

    மகளின் திருமண ஏற்பாட்டில் நளினி தீவிரம்

    சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் 5-ம் நாளான இன்று காலை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வந்து கையெழுத்திட்ட நளினி, மகளின் திருமண ஏற்பாட்டில் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், நளினி, பேரறிவாளன் உள்பட 7 பேர் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இதில் வேலூர் பெண்கள் தனிச்சிறையில் இருந்த நளினியின் கோரிக்கையை ஏற்று அவரது மகள் திருமண ஏற்பாட்டிற்காக சென்னை ஐகோர்ட் அவருக்கு 30 நாள் பரோல் வழங்கியது.

    கடந்த 25-ந் தேதி பரோலில் வந்த நளினி சத்துவாச்சாரி புலவர் நகரில் உள்ள திராவிடர் இயக்க தமிழர் பேரவை நிர்வாகி வீட்டில் தங்கியுள்ளார். கோர்ட்டு உத்தரவுப்படி தினமும் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் நளினி கையெழுத்திட்டு வருகிறார்.

    அதன்படி, 5-ம் நாளான இன்று காலை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்திற்கு வந்து கையெழுத்திட்டார்.

    இந்நிலையில், கடந்த 27-ந் தேதி இரவு சென்னையில் இருந்து வந்திருந்த அவரது தம்பி பாக்கியநாதனிடம் மகளின் திருமண ஏற்பாடுகள் குறித்து நளினி தீவிரமாக ஆலோசித்துள்ளார்.

    கோர்ட் உத்தரவுப்படி வேலூர் சிறையில் நளினி முருகன் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து பேசி வருகின்றனர். அதன்படி, வரும் 3-ந் தேதி வேலூர் சிறையில் முருகனை சந்திக்கிறார்.

    அப்போது மகள் ஹரித்ராவின் திருமணம் குறித்து ஆலோசிக்க திட்டமிட்டுள்ளார்.


    Next Story
    ×