search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    நடத்தையில் சந்தேகம்: மனைவியை கொன்ற கணவர் கைது

    நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை வெட்டிக்கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள நாகல்குழி கிராமத்தை சேர்ந்தவர் பாக்யராஜ் (வயது 30). இவரது மனைவி அம்பிகா(28). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. அனுஷ்யா(9), சபரி(7) என 2 குழந்தைகள் உள்ளனர். பாக்யராஜ் கடந்த 3 ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் இருந்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஊருக்கு வந்தார். அப்போது முதல் அடிக்கடி மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

    அப்போது பாக்யராஜ், அம்பிகாவை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

    இதுகுறித்து தகவல் அறிந்த இரும்புலிக்குறிச்சி போலீசார் பாக்யராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×