என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
    X
    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

    பொள்ளாச்சி பாலியல் சம்பவம்- மாதர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

    பொள்ளாச்சியில் நடந்த, இளம் பெண்கள் மீதான பாலியல் கொடுமையை கண்டித்து, மாதர் சங்கம் சார்பில் தருமபுரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. #PollachiAbuseCase
    தருமபுரி:

    பொள்ளாச்சியில் நடந்த, இளம் பெண்கள் மீதான பாலியல் கொடுமையை கண்டித்து, மாதர் சங்கம் சார்பில் தருமபுரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் தெரசாமேரி தலைமை வகித்தார். தோழி கூட்டமைப்பின் அமைப்பாளர் சங்கர் உள்பட பலர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் பொள்ளாச்சியில் பெண்களை கொடுமைப்படுத்தியவர்களை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும். சிறப்பு புலனாய்வு விசாரணை நடத்த வேண்டும். குற்றவாளிகளை மறைக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோ‌ஷம் எழுப்பப்பட்டது. பல்வேறு பெண்கள் கூட்டமைப்பினர் திரளாக பங்கேற்றனர். #PollachiAbuseCase
    Next Story
    ×