என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாகராஜ் மது பார் அடித்து நொறுக்கப்பட்டது- பொதுமக்கள் ஆத்திரம்
Byமாலை மலர்13 March 2019 8:24 AM GMT (Updated: 13 March 2019 8:24 AM GMT)
பொள்ளாச்சியில் பாலியல் புகார் கொடுத்த மாணவியின் அண்ணனை தாக்கிய நாகராஜ் மதுபாரை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். #PollachiAbuseCase
பொள்ளாச்சி:
பொள்ளாச்சியில் மாணவிகள்- இளம்பெண்களை ஆபாச படம் எடுத்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரி ராஜன், சதிஷ், வசந்தகுமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கல்லூரி மாணவி ஒருவர், தன்னிடம் தகாத முறையில் நடக்க முயன்றதாக போலீசில் கொடுத்த புகாரின் பேரில் தான் இந்த 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
புகார் கொடுத்த கல்லூரி மாணவியின் அண்ணனை மிரட்டிய வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் பார் நாகராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் உடனே ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் நாகராஜை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கி அந்த கட்சி தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.
நாகராஜூக்கு சொந்தமான மது பார் பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் சூளேஸ்வரன் பட்டி ஓம் பிரகாஷ் பஸ் நிறுத்தம் பகுதியில் அமைந்துள்ளது.
இன்று மதியம் அங்கு சென்ற 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மதுபாரை சூறையாடினார்கள். அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினார்கள்.
இதனால் மது குடிக்க வந்தவர்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பதட்டம் நிலவியது. இது குறித்து பொதுமக்கள் கூறும் போது, மாணவிகள்- இளம்பெண்களை ஆபாச படம் எடுத்த விவகாரத்தில் பார் நாகராஜூக்கும் தொடர்பு உள்ளது.
அவரையும் கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என பொதுமக்கள் ஆவேசமாக கூறினார்கள். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். #PollachiAbuseCase
பொள்ளாச்சியில் மாணவிகள்- இளம்பெண்களை ஆபாச படம் எடுத்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரி ராஜன், சதிஷ், வசந்தகுமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கல்லூரி மாணவி ஒருவர், தன்னிடம் தகாத முறையில் நடக்க முயன்றதாக போலீசில் கொடுத்த புகாரின் பேரில் தான் இந்த 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
புகார் கொடுத்த கல்லூரி மாணவியின் அண்ணனை மிரட்டிய வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் பார் நாகராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் உடனே ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் நாகராஜை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கி அந்த கட்சி தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனால் மது குடிக்க வந்தவர்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பதட்டம் நிலவியது. இது குறித்து பொதுமக்கள் கூறும் போது, மாணவிகள்- இளம்பெண்களை ஆபாச படம் எடுத்த விவகாரத்தில் பார் நாகராஜூக்கும் தொடர்பு உள்ளது.
அவரையும் கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என பொதுமக்கள் ஆவேசமாக கூறினார்கள். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். #PollachiAbuseCase
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X