search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆரணியில் 72 வயது பெண் துறவி ஜீவ சமாதி அடைந்தார்
    X

    ஆரணியில் 72 வயது பெண் துறவி ஜீவ சமாதி அடைந்தார்

    திருவண்ணாமலை அருகே ஜெயின் மதத்தை சேர்ந்த 72 வயது பெண் துறவி ஜீவ சமாதி அடைந்தார்.

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே திருமலை கிராமத்தில் ராஜராஜசோழன் சகோதரி குந்தவை நாச்சியார் கட்டிய 1000 ஆண்டுகள் பழமையான சமணர் கோவில் உள்ளது.

    இங்கு ஸ்வஸ்தி ஸ்ரீடாக்டர் தவளகீர்த்தி சுவாமிகள் ஜெயின் மடம் ஒன்றினை நிறுவி ஆசிரமம் நடத்தி வருகிறார்.

    ஏராளமான துறவிகளும், முனிவர்களும், மாதாஜிகளும் இங்கு வந்து செல்கின்றனர். தற்போது 2 நிர்வாண முனிவர்களும், 10 பெண் துறவிகளும் தங்கி உள்ளனர்.

    அவர்களில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்த ஸ்ரீசுகுந்தன் மதிமாதாஜி (வயது 72) என்ற பெண் துறவியும் தங்கியிருந்தார். அவர் ஜீவ சமாதி அடைவதற்காக கடந்த 6 நாட்களுக்கு முன்பு உணவு மற்றும் தண்ணீரை குருசன்னிதானத்தின் முன்னிலையில் தியாகம் செய்தார். அவரது உடல் நிலையை அங்குள்ள பெண் துறவிகள் கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் 6-வது நாளான நேற்று மாலை 5 மணியளவில் ஸ்ரீசுகுந்தன் மதி மதாஜி ஜீவ சமாதி அடைந்தார்.

    கொம்மனந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் அவரது உடலை பரிசோதனை செய்து மரணம் அடைந்ததை உறுதி செய்தார். இதையடுத்து 500 சமண பக்தர்கள் முன்னிலையில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. 

    Next Story
    ×