என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
3 வங்கிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு - வங்கி ஊழியர்கள் 26-ந்தேதி ஸ்டிரைக்
சென்னை:
தேனா வங்கி, பரோடா வங்கி, விஜயா வங்கி ஆகியவற்றை இணைத்து ஒரு புதிய பெரிய வங்கியை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
மத்திய அரசின் வங்கி இணைப்பு கொள்கையை எதிர்த்து வருகிற 26-ந்தேதி ஒரு நாள் அடையாள எதிர்ப்பு வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச். வெங்கடாசலம் கூறியதாவது:-
வங்கிகள் இணைப்பு முடிவு தேவையற்றது. ஏழை-எளிய மக்களுக்கு சேவை செய்ய பெரிய வங்கிகள் தேவையில்லை. உலகளவில் செயல்பட்ட பெரிய வங்கிகள் எல்லாம் மூடப்பட்டு விட்டன. சாதாரண ஏழை மக்களின் சேமிப்பு வைப்புகளை பெற்றுக் கொண்டு செயல்படும் இந்திய வங்கிகள் மேலை நாட்டு பெரிய வங்கிகள் போல சிக்கி கொள்ளக் கூடாது.
சாதாரண சேமிப்பை வைத்து ஏழை மக்களுக்கு விவசாயத்திற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் கடன் வழங்கும் திறமையான வங்கிகளை தொடங்குவது தான் அவசியம்.
வங்கிகள் இணைப்பின் மூலம் நூற்றுக்கணக்கான கிளைகளை மூடும் நிலை உள்ளது. ஒரு புறம் அனைவருக்கும் வங்கி சேவை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ‘‘ஜந்தன் யோஜனா’’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்து விட்டு மறுபுறம் வங்கி இணைப்பு என்ற பெயரில் கிளைகளை மூடும் திட்டத்தை அறிவிப்பது ஏற்புடையது அல்ல. மேலும் வங்கிகள் போன்ற பொதுத்துறை மூலம் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. மூடும் நடவடிக்கையால் வேலை வாய்ப்பு குறையும். எனவே இந்த முடிவு பொது மக்களுக்கும், இளைஞர்களுக்கும் பொருளாதாரத்திற்கும் உகந்தது அல்ல.
வங்கிகளை விரிவுபடுத்தும் அவசியம் இருக்கின்ற போது அவற்றை இணைப்பது தவறான கொள்கை. அதுமட்டுமின்றி பெரும் முதலாளிகள் திருப்பி செலுத்தாத வாராக்கடன்களை வசூலிப்பதே வங்கிகளின் தலையாய கடமையாகும்.
அதனை விடுத்து வங்கி இணைப்பு கொள்கையில் ஆர்வம் காட்டுவது அடிப்படை பிரச்சினையில் இருந்து விலகி நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்புவதாக அமைந்துள்ளது.
எனவே வங்கி இணைப்பு கொள்கையை கைவிட வேண்டும் என வலியுறுத்தி 26-ந்தேதி வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. அதன் காரணமாக வங்கி பணிகள் முழுமையாக பாதிக்கப்படும். வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் என 10 லட்சம் பேர் இதில் பங்கேற்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #BankWorkersStrike
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்