search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    6 விமான நிலையங்களை தனியார் மயமாக்க எதிர்ப்பு- சென்னை விமான நிலைய ஊழியர்கள் போராட்டம்
    X

    6 விமான நிலையங்களை தனியார் மயமாக்க எதிர்ப்பு- சென்னை விமான நிலைய ஊழியர்கள் போராட்டம்

    திருவனந்தபுரம், மங்களூர், கவுகாத்தி உள்ளிட்ட 6 விமான நிலையங்களை தனியார் மயமாக்குவதை எதிர்த்து இன்று சென்னை விமான நிலைய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். #chennaiAirport
    ஆலந்தூர்:

    திருவனந்தபுரம், மங்களூர், கவுகாத்தி, லக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர் ஆகிய 6 விமான நிலையங்களை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.

    இதற்கு அனைத்து விமான நிலைய ஊழியர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். விமான நிலையங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்து இன்று இந்தியா முழுவதும் அனைத்து விமான நிலையங்களிலும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதேபோல் சென்னை விமான நிலையத்திலும் அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அவர்கள் விமான நிலையத்தில் உள்நாட்டு முனையம் 1-வது வருகை நுழைவு வாயில் அருகே தொடர் உண்ணாவிரதத்தை தொடங்கினர். வருகிற புதன்கிழமை வரை இந்த உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.

    விமான நிலைய ஊழியர்களின் போராட்டத்தால் விமான சேவை மற்றும் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பணிகள் பாதிக்காத வகையில் ஊழியர்கள் பகுதியாக வந்துபோராட்டத்தை தொடர்ந்து உள்ளனர். #chennaiAirport

    Next Story
    ×