search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிந்தாதிரிப்பேட்டை கூவம் ஆற்றில் ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் இடிப்பு
    X

    சிந்தாதிரிப்பேட்டை கூவம் ஆற்றில் ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் இடிப்பு

    சென்னை சிந்தாதிரிப்பேட்டை அருகே கூவம் ஆற்றில் ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் இடிக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    சென்னை:

    கூவம் ஆற்றோரம் 1000 வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. அவர்கள் குடிசைகள் போட்டு வசித்து வருகிறார்கள். அவர்களை அங்கிருந்து வெளியேற்றி பெரும்பாக்கத்தில் இடம் கொடுக்க மாநகராட்சி முடிவு செய்தது.

    ஆக்கிரமிப்பாளர்கள் வீடுகளை காலி செய்ய மாநகராட்சி அதிகாரிகள் ஏற்கனவே கூறி இருந்தனர். ஆனால் அவர்கள் காலி செய்யாமல் இருந்து வந்தனர்.

    இன்று காலையில் அதிகாரிகள் போலீசார் உதவியுடன் கூவம் ஆற்றோரம் குடியிருந்து வரும் குடும்பத்தினரிடம் சென்று வீடுகளை காலி செய்ய கூறினர். அதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அவர்களுக்கு பெரும்பாக்கத்தில் இடம் ஒதுக்கி இருப்பதாகவும், வீடுகளை காலி செய்து விட்டு அங்கு செல்லும்படி கூறினர். ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.


    ஆக்கிரமித்து கட்டிய வீடுகளை நீங்களே அப்புறப்படுத்திக் கொண்டால் தங்கள் உடமைகள் சேதம் இல்லாமல் எடுத்து கொள்ளலாம். ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடிக்கப்பட்டால் பொருட்கள் சேதம் அடையும் என்று விளக்கமாக கூறினர்.

    இதையடுத்து அப்பகுதி மக்கள் பொருட்களை எடுக்க முன்வந்தனர். பொருட்களை தங்கள் வீடுகளில் இருந்து ஒவ்வொரு குடும்பத்தினரும் வெளியே எடுத்து பாதுகாப்பாக வைத்துக் கொண்டனர்.

    மாநகராட்சி அதிகாரிகள் ஜே.சி.பி. எந்திரத்தை கொண்டு வந்தவுடன் பதட்டமான மக்கள் வேகமாக பொருட்களை பாதுகாத்து கொள்வதில் ஆர்வம் காட்டினர். பொருட்களை வெளியே எடுத்தவுடன் வீடுகளை தரைமட்டமாக்க அதிகாரிகள் தயாரானார்கள்.

    உடனே ஆற்றோரம் குடியிருந்த ஏழை மக்கள் கட்டில், பீரோ, டி.வி., பாத்திரங்கள், சமையல் பொருட்கள் போன்றவற்றை மூட்டைகளாக கட்டினர். மாநகராட்சி அதிகாரிகள் அவர்களை எச்சரித்தப்படி நடவடிக்கையில் இறங்கினர். நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
    Next Story
    ×