என் மலர்
செய்திகள்

10 வயது பள்ளி சிறுமியை பலாத்காரம் செய்த கூலி தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே 10 வயது பள்ளி சிறுமியை பலாத்காரம் செய்த கூலி தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அடைகலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பால்ராஜ்(37). கூலி தொழிலாளியான இவர், கடந்த 2015ம் ஆண்டு ஜுலை மாதம் 22ம் தேதி அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்த 10 வயது சிறுமியை, மதிய உணவு இடைவேளையின் போது, தனது வீட்டிற்கு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த அந்த சிறுமியின் பெற்றோர்கள், தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து, பால்ராஜை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக பால்ராஜிக்கு 5 வருட சிறைத் தண்டனை மற்றும் ரூ. ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் கலையரசி ஆஜரானார்.
Next Story