search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாரத் பந்த் - கடையை மூடச் சொன்னதால் அரிவாளைக் காட்டி மிரட்டிய உரிமையாளர்
    X

    பாரத் பந்த் - கடையை மூடச் சொன்னதால் அரிவாளைக் காட்டி மிரட்டிய உரிமையாளர்

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் முழு அடைப்பு போராட்டத்தையொட்டி கடையை மூட வேண்டும் என வலியுறுத்திய காங்கிரஸ் கட்சியினரை அந்தக் கடையின் உரிமையாளர் அரிவாளைக் காட்டி மிரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. #BharatBandh #ShopOwnerThreatened
    கோவில்பட்டி:

    பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. கடையடைப்பு, ஆர்ப்பாட்டம், ரெயில் மறியல், சாலை மறியல் என எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். சில இடங்களில் கட்டாயப்படுத்தி கடைகளை அடைத்துள்ளனர்.

    இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடைகளை அடைக்கும்படி காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். அப்போது ஒரு கடையின் உரிமையாளர் அரிவாளைக் காட்டி காங்கிரஸ் கட்சியினரை மிரட்டியுள்ளார்.

    இதனைத் தொடர்ந்து கடைக்கு முன் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் இருதரப்பையும் சமாதானம் செய்தனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #BharatBandh #ShopOwnerThreatened
    Next Story
    ×