என் மலர்
செய்திகள்

நெய்வேலியில் அரிசி கடைக்குள் லாரி புகுந்தது - 5 பேர் படுகாயம்
கடலூர் மாவட்டம் நெல்வேலி அருகே இன்று காலை லாரி ஒன்று டிரைவரிடன் கட்டுப்பாட்டை இழந்து அரிசி கடைக்குள் புகுந்த விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
நெய்வேலி:
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்திலிருந்து கரும்பு லோடு ஏற்றி கொண்டு லாரி ஒன்று விருத்தாசலம் நோக்கி இன்று புறப்பட்டது. லாரியை நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த இளங்கோவன் ஓட்டி வந்தார். லாரியில் கிளீனர் ஒருவரும் இருந்தார்.
அந்த லாரி இன்று காலை 11 மணி அளவில் நெய்வேலி பகுதியில் உள்ள விருத்தாசலம் -கடலூர் மெயின்ரோட்டில் நான்கு முனை சந்திப்பு பகுதியில் வந்து கொண்டிருந்தது.
அப்போது டிரைவர் இளங்கோவனின் கட்டுப்பாட்டை இழந்த லாரி திடீரென்று தாறுமாறாக ஓடி அந்த பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்த கார் மீது மோதியது. அதன் பின்னர் அங்குள்ள மரத்தின் மீது மோதி அருகில் இருந்த அரிசி கடைக்குள் புகுந்து கவிழ்ந்தது.
இந்த விபத்தில் அரிசி கடையில் வியாபாரத்தை கவனித்து கொண்டிருந்த கடை உரிமையாளரின் தந்தை சுப்பையா(வயது 60), கடையில் அரிசி வாங்க வந்த கருப்பன், சுரேஷ் மற்றும் லாரி டிரைவர் இளங்கோவன், கிளீனர் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த நெய்வேலி மந்தாரக்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிபாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் படுகாயம் அடைந்த சுப்பையாவை மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விபத்து குறித்து மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்திலிருந்து கரும்பு லோடு ஏற்றி கொண்டு லாரி ஒன்று விருத்தாசலம் நோக்கி இன்று புறப்பட்டது. லாரியை நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த இளங்கோவன் ஓட்டி வந்தார். லாரியில் கிளீனர் ஒருவரும் இருந்தார்.
அந்த லாரி இன்று காலை 11 மணி அளவில் நெய்வேலி பகுதியில் உள்ள விருத்தாசலம் -கடலூர் மெயின்ரோட்டில் நான்கு முனை சந்திப்பு பகுதியில் வந்து கொண்டிருந்தது.
அப்போது டிரைவர் இளங்கோவனின் கட்டுப்பாட்டை இழந்த லாரி திடீரென்று தாறுமாறாக ஓடி அந்த பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்த கார் மீது மோதியது. அதன் பின்னர் அங்குள்ள மரத்தின் மீது மோதி அருகில் இருந்த அரிசி கடைக்குள் புகுந்து கவிழ்ந்தது.
இந்த விபத்தில் அரிசி கடையில் வியாபாரத்தை கவனித்து கொண்டிருந்த கடை உரிமையாளரின் தந்தை சுப்பையா(வயது 60), கடையில் அரிசி வாங்க வந்த கருப்பன், சுரேஷ் மற்றும் லாரி டிரைவர் இளங்கோவன், கிளீனர் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த நெய்வேலி மந்தாரக்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிபாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் படுகாயம் அடைந்த சுப்பையாவை மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விபத்து குறித்து மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






