என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெள்ளகோவில் அருகே அணைக்கட்டில் தீவிபத்து- 200 ஏக்கர் மரங்கள் சேதம்
Byமாலை மலர்27 Aug 2018 5:34 AM GMT (Updated: 27 Aug 2018 5:34 AM GMT)
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே அணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 200 ஏக்கர் பரப்பிலான மரங்கள் எரிந்து சேதம் அடைந்தது.
வெள்ளகோவில்:
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள உத்தமபாளையத்தில் வட்டமலை கரை ஓடை அணை உள்ளது. சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் இந்த அணை அமைந்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளாக இந்த அணைக்கு நீர்வரத்து இல்லை. பி.ஏ.பி. கால்வாய் மூலம் தான் இந்த அணைக்கு தண்ணீர் வரவேண்டும். ஆனால் கால்வாய்கள் தூர்வாரப்படாதால் அணைக்கு தண்ணீர் வராமல் காய்ந்து கிடந்தது. இதனால் சீமை கருவேல் மரங்கள், பனை மரங்கள், செடி, கொடிகள் வளர்ந்து இருந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் திடீரென அணை பகுதியில் உள்ள மரங்களில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ மளமளவென பரவியது. இதனால் அணை பகுதியில் வசித்து வந்த மான்கள், மயில்கள் உள்ளிட்டவைகள் கூச்சல் போட்டபடி வெளியேறியது.
இந்த தீ விபத்தை அங்கு மாடு மேய்த்து கொண்டிருந்தவர்கள் பார்த்து வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் அணை பகுதியில் 200 ஏக்கர் பரப்பளவில் உள்ள மரங்கள் எரிந்து சேதம் அடைந்தது.
அணைக்கட்டில் உள்ள மரங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தார்களா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள உத்தமபாளையத்தில் வட்டமலை கரை ஓடை அணை உள்ளது. சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் இந்த அணை அமைந்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளாக இந்த அணைக்கு நீர்வரத்து இல்லை. பி.ஏ.பி. கால்வாய் மூலம் தான் இந்த அணைக்கு தண்ணீர் வரவேண்டும். ஆனால் கால்வாய்கள் தூர்வாரப்படாதால் அணைக்கு தண்ணீர் வராமல் காய்ந்து கிடந்தது. இதனால் சீமை கருவேல் மரங்கள், பனை மரங்கள், செடி, கொடிகள் வளர்ந்து இருந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் திடீரென அணை பகுதியில் உள்ள மரங்களில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ மளமளவென பரவியது. இதனால் அணை பகுதியில் வசித்து வந்த மான்கள், மயில்கள் உள்ளிட்டவைகள் கூச்சல் போட்டபடி வெளியேறியது.
இந்த தீ விபத்தை அங்கு மாடு மேய்த்து கொண்டிருந்தவர்கள் பார்த்து வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் அணை பகுதியில் 200 ஏக்கர் பரப்பளவில் உள்ள மரங்கள் எரிந்து சேதம் அடைந்தது.
அணைக்கட்டில் உள்ள மரங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தார்களா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X