search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    10 நாட்களாக  102 அடியில் நீடிக்கும் பவானிசாகர் அணை
    X

    10 நாட்களாக 102 அடியில் நீடிக்கும் பவானிசாகர் அணை

    பவானிசாகர் அணைக்கு இன்று காலை வினாடிக்கு 3138 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கடந்த 10 நாட்களாகவே அணையின் நீர்மட்டம் 102 அடியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. #BhavanisagarDam
    ஈரோடு:

    கடந்த 5 ஆண்டுக்கு பிறகு பவானிசாகர் அணை தனது முழு கொள்ளவை எட்டியது.

    தொடர்ந்து பெய்த மழையால் அணைக்கு வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பவானி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது.

    தற்போது மழை நின்று விட்டதால் அணைக்கு வரும் நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. இன்று காலை அணைக்கு வினாடிக்கு 3138 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணைக்கு வரும் தண்ணீர் அதாவது 3100 கனஅடி தண்ணீர் பாசனத்துக்காக வாய்க்கால்களிலும், குடிநீருக்காக பவானி ஆற்றிலும் திறந்துவிடப்பட்டு உள்ளது.

    இன்று அணையின் நீர்மட்டம் 102 அடியாக இருந்தது. கடந்த 10 நாட்களாகவே அணையின் நீர்மட்டம் 102 அடியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

    அணையில் இருந்து வாய்க்கால்களில் திறந்து விடப்பட்ட தண்ணீரால் விவசாயிகள், விவசாயப் பணிகளையும் தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் தினமும் அணைக்கு கணிசமான அளவில் தண்ணீர் வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தும் உள்ளனர். #BhavanisagarDam
    Next Story
    ×