என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 27 பேர் விடுதலை
Byமாலை மலர்25 Aug 2018 3:37 AM GMT (Updated: 25 Aug 2018 3:37 AM GMT)
இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 27 பேர் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் இன்னும் ஓரிரு நாட்களில் தமிழகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. #TNFishermen
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை பகுதியில் இருந்து 3 நாட்டுப்படகுகளிலும், நாகையில் இருந்து ஒரு நாட்டுப்படகிலும் கடந்த 8-ந் தேதி 27 மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 27 தமிழக மீனவர்களையும் சிறைபிடித்து சென்றனர். அவர்கள் அனைவரும் ஊர்க்காவல்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று மீனவர்கள் அனைவரும் வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, 27 மீனவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். அதில் ஒரு படகில் தடை செய்யப்பட்ட வலைகள் இருந்ததால் அதில் சென்ற 7 மீனவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தார். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் இன்னும் ஓரிரு நாட்களில் தமிழகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தகவலை நிரபராதி மீனவர் விடுதலை கூட்டமைப்பு தலைவர் அருளானந்தம் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை பகுதியில் இருந்து 3 நாட்டுப்படகுகளிலும், நாகையில் இருந்து ஒரு நாட்டுப்படகிலும் கடந்த 8-ந் தேதி 27 மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 27 தமிழக மீனவர்களையும் சிறைபிடித்து சென்றனர். அவர்கள் அனைவரும் ஊர்க்காவல்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று மீனவர்கள் அனைவரும் வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, 27 மீனவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். அதில் ஒரு படகில் தடை செய்யப்பட்ட வலைகள் இருந்ததால் அதில் சென்ற 7 மீனவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தார். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் இன்னும் ஓரிரு நாட்களில் தமிழகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தகவலை நிரபராதி மீனவர் விடுதலை கூட்டமைப்பு தலைவர் அருளானந்தம் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X