search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோட்டிலிருந்து ரெயில் மூலம் வெளி மாநிலத்துக்கு அனுப்பப்படும் ஜவுளிகள்
    X

    ஈரோட்டிலிருந்து ரெயில் மூலம் வெளி மாநிலத்துக்கு அனுப்பப்படும் ஜவுளிகள்

    நாடு முழுவதும் லாரிகள் வேலை நிறுத்தம் இன்று 8-வது நாளாக நீடித்து வரும் நிலையில் ஈரோட்டிலிருந்து ரெயில்கள் மூலம் ஜவுளிகள் வெளி மாநிலத்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. #LorryStrike
    ஈரோடு:

    நாடு முழுவதும் லாரிகள் வேலை நிறுத்தம் இன்று 8-வது நாளாக நீடித்து வருகிறது.

    ஈரோடு மாவட்டம் முழுவதும் இன்று வரை சுமார் ரூ 400 கோடி மேல் பொருட்கள் தேக்கமடைந்துள்ளன. இதில் ஜவுளிகள் மற்றும் மஞ்சள் மூட்டை மூட்டையாக குடோன்களில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

    சுமை தூக்கும் தொழிலாளர்கள் கடந்த ஒரு வார காலமாக வேலையில்லாமல் தவித்து வருகிறார்கள். வேலை நிறுத்தம் எப்பொழுது வாபஸ் ஆகுமோ? என்று காத்திருக்கிறார்கள்.

    இந்த நிலையில் ஈரோட்டில் இருந்து ரெயில்கள் மூலம் ஜவுளிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஈரோடு ரெயில் நிலைய பார்சல் அலுவலகம் முன் ஜவுளி பண்டல்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

    ஈரோட்டிலிருந்து பெரும்பாலும் வெளிமாநிலங்களுக்கு இந்த ஜவுளிகள் அனுப்பப்பட்டு வருவதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர். கர்நாடகா, ஆந்திரா மும்பை,ஹைதராபாத் விசாகப்பட்டினம் போன்ற பகுதிகளுக்கு ஜவுளி பண்டல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

    இதேபோல் கேரள மாநிலம் பாலக்காடு திருச்சூர், கொல்லம் ஆகிய பகுதிகளுக்கும் மேலும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் ரெயில்கள் மூலம் ஜவுளிகள் அனுப்பப்பட்டு வருகிறது.

    ரெயில்கள் மூலம் சொற்ப அளவில்தான் ஜவுளிகள் மற்றும் இதர பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது அதேசமயம் மலைபோல் பல்வேறு பொருட்கள் தேங்கி உள்ளன. #LorryStrike

    Next Story
    ×