என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.63 லட்சம் மோசடி செய்த அ.தி.மு.க. நிர்வாகி கைது
திண்டுக்கல்:
திருச்சி பாலக்கரையைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 42). இவர் திருச்சி மாவட்ட அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு செயலாளராக உள்ளார். இவரிடம் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஆண்டியப்ப பிள்ளை தெருவைச் சேர்ந்த லாரி டிரான்ஸ்போர்ட்டு நடத்தும் செந்தில்குமார் (54), உலுப்பகுடியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி (48), ஆகியோர் தங்களுக்கு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருமாறு அணுகியுள்ளனர்.
ரவிச்சந்திரனும் தனக்கு அரசியல் செல்வாக்கு உள்ளதால் அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக், டிரைவர், கண்டக்டர், உதவி பொறியாளர், ஆய்வக உதவியாளர் ஆகிய வேலைகளை வாங்கித் தர முடியும் என கூறியுள்ளார்.
அதன் பேரில் செந்தில்குமார், பாலசுப்பிரமணி கடந்த 2015-ம் ஆண்டு நத்தம் பகுதியைச் சேர்ந்த 11 பேரிடம் இருந்து ரூ4½ லட்சம் முதல் ரூ. 5½ லட்சம் வரை வசூலித்து ரூ.63 லட்சம் பணத்தை கொடுத்தனர். ஆனால்சொன்னபடி அவர் வேலை வாங்கித் தரவில்லை. தங்களை மோசடி செய்ததை உணர்ந்த அவர்கள் பணத்தை திருப்பி தருமாறு கேட்ட போது கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து ரவிச்சந்திரனை கைது செய்தனர். உடந்தையாக இருந்த அவரது தந்தை கோபாலை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்