என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மன்னார்குடி அருகே பன்றிகளை கொல்ல வைத்திருந்த வெடி வெடித்து பெண் காயம்
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை அருகே உள்ள உக்காடு தென்பரையை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு. ஓய்வு பெற்ற கிராம உதவியாளர். இவருடைய மனைவி புஷ்பவள்ளி (வயது 55).
இவர் நேற்று மதியம் தனது வீட்டில் உள்ள ஆடு, மாடுகளுக்கு கார்வயல் கோட்டகம் என்ற இடத்தில் உள்ள வயலில் புல் அறுக்க சென்றார். வயல்களில் பயிர்களை நாசம் செய்யும் பன்றிகளை கொல்ல வயல் வரப்புகளில் வெங்காய வெடி என்ற ஒரு வகை வெடியை வைப்பது வழக்கம்.
புஷ்பவள்ளி வயலில் புல் அறுத்து கொண்டிருந்த போது வரப்பில் பன்றிகளை கொல்ல வைத்திருந்த வெடி, புஷ்பவள்ளி கையில் இருந்த அரிவாளில் சிக்கியது. அப்போது அந்த வெடி பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் புஷ்பவள்ளியின் இடது கை மணிக்கட்டு வரை சிதைந்து சம்பவ இடத்திலேயே அவர் மயங்கி விழுந்தார்.
உடனே அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு புஷ்பவள்ளிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து திருமக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பன்றிகளை கொல்ல வைத்திருந்த வெடி வெடித்து பெண் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் மன்னார்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்