search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் அருகே நிச்சயிக்கப்பட்ட பெண்ணை காரில் கடத்த முயற்சி
    X

    திண்டுக்கல் அருகே நிச்சயிக்கப்பட்ட பெண்ணை காரில் கடத்த முயற்சி

    திண்டுக்கல் அருகே நிச்சயிக்கப்பட்ட பெண்ணை காரில் கடத்தியவர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகில் உள்ள காணப்பாடி புதுப்பட்டியை சேர்ந்தவர் கார்த்திகா (வயது25). திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் எரியோடு கோவிலூர் அருகில் உள்ள ரெட்டியபட்டியை சேர்ந்த கார் டிரைவர் முத்துவேல் என்பவருக்கும் திருமணம் செய்ய பேச்சுவார்த்தை நடந்தது. இரு வீட்டாரும் சம்மதத்தின்பேரில் 3 மாதம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என நிச்சயம் செய்யப்பட்டது.

    ஆனால் கார்த்திகாவிற்கு முத்துவேலை பிடிக்க வில்லை என்று தனது வீட்டில் கூறி உள்ளார். இதனால் முத்துவேல் குடும்பத்தினர் பலமுறை அவர்களிடம் தொடர்பு கொண்டும் எவ்வித பதிலும் கூறாமல் இருந்து வந்தனர். மேலும் திருமண பேச்சுவார்த்தை நடத்துவதையும் தவிர்த்தனர். இதனால் முத்துவேல் தனது நண்பர் உதவியுடன் கார்த்திகாவை கடத்தி திருமணம் செய்ய முடிவு செய்தார்.

    இன்று காலை தனது நண்பர் பெரியசாமியுடன் காரில் கார்த்திகா வீட்டு அருகே காத்திருந்தார். அவர் வேலைக்கு செல்லும்போது திடீரென அவரை காருக்குள் இழுத்து கடத்த முயன்றனர். அப்போது கார்த்திகா கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் அவரது வீட்டிற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கிருந்த ஆட்டோ ஸ்டாண்டிற்கு தகவல் அனுப்பி கார் மடக்கி பிடிக்கப்பட்டது.

    இதனையடுத்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் அவர்களை ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×