search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜனதா கொடி எரிப்பு வழக்கு - என்ஜினீயர் உள்பட 2 பேர் கைது
    X

    பா.ஜனதா கொடி எரிப்பு வழக்கு - என்ஜினீயர் உள்பட 2 பேர் கைது

    பா.ஜனதா கொடியை எரித்ததாக விருதுநகரை சேர்ந்த என்ஜினீயர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    விருதுநகர்:

    விருதுநகரில் உள்ள பா.ஜனதா அலுவலகம் முன்பு 60 அடி கம்பத்தில் ஏற்றப்பட்டு இருந்த கட்சிக்கொடி, கடந்த சில நாட்களுக்கு முன்பு தீ வைத்து எரிக்கப்பட்டது.

    இது குறித்து விருதுநகர் மேற்கு போலீசில் பா.ஜனதா மாவட்ட பொதுச் செயலாளர் கஜேந்திரன் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

    எதற்காக தீ வைத்தனர்? அவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் விருதுநகர் அய்யனார் நகரைச் சேர்ந்த என்ஜினீயர் தியாகராஜன் (வயது 21), அன்னை சிவகாசி நகரைச் சேர்ந்த மதன்குமார் (22) ஆகியோர் தான் கொடிக்கு தீ வைத்தனர் என்பது தெரியவரவே போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    கைதான மதன்குமார், ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் என கூறப்படுகிறது.

    Next Story
    ×