என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நிதி இழப்பை சமாளிக்க நெல்லை போக்குவரத்து கழகம் மதுரை மண்டலத்துடன் இணைப்பு
Byமாலை மலர்11 May 2018 2:07 PM GMT (Updated: 11 May 2018 2:07 PM GMT)
2010-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட நெல்லை போக்குவரத்து கழகம் கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில், மீண்டும் மதுரை மண்டலத்துடன் இணைக்கப்பட்டது. #TNSTC
சென்னை:
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சென்னை, மதுரை, நெல்லை, கோவை, கும்பகோணம், சேலம் என 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. பஸ்கள் இயக்கம் மூலம் போக்குவரத்துக் கழகங்களுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 26 கோடி வருவாய் கிடைக்கிறது.
ஆனால், செலவு பல மடங்கு உள்ளது. இதன் காரணமாக அரசு போக்குவரத்துக் கழகங்கள் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.14 கோடி வரை நஷ்டத்தில் இயங்குகிறது. நிதி நெருக்கடியை சரிசெய்ய வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. அதன்படி, செலவை குறைக்கும் வகையில் போக்குவரத்துக் கழகங்களை இணைக்க வல்லுநர் குழு அரசுக்கு பரிந்துரைத்தது.
முதல்கட்டமாக, திருநெல்வேலியை மதுரை போக்குவரத்துக் கழகத்துடன் இணைக்குமாறு அறிவுறுத்தினர். ஏற்கனவே, நெல்லை மதுரை மண்டலத்துடன்தான் இருந்தது. 2010-ல் நெல்லை புதிய மண்டலம் உருவாக்கப்பட்டது. தற்போது, நெல்லை மண்டலத்தில் மட்டும் சுமார் 1897 பஸ்கள் மற்றும் 30 டெப்போக்கள் உள்ளன. 12,478 பேர் பணிபுரிகின்றனர்.
மொத்தம் உள்ள 8 மண்டலத்தில் நெல்லையில்தான் மோசமாக உள்ள பஸ்கள் இயக்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த மண்டலத்தில் இயக்கப்படும் 90 சதவீத பஸ்கள் காலாவதியானவை. இங்கு ஆண்டுக்கு சுமார் 2,000 கோடி நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, மண்டலத்தை இணைத்துவிட்டால் செலவு குறையும் என அறிக்கை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், வல்லுநகர் குழு பரிந்துரையை ஏற்று திருநெல்வேலி போக்குவரத்துக் கழகத்தை மதுரையுடன் இணைத்து இன்று அரசாணை பிறபிக்கப்பட்டுள்ளது. #TNSTC
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சென்னை, மதுரை, நெல்லை, கோவை, கும்பகோணம், சேலம் என 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. பஸ்கள் இயக்கம் மூலம் போக்குவரத்துக் கழகங்களுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 26 கோடி வருவாய் கிடைக்கிறது.
ஆனால், செலவு பல மடங்கு உள்ளது. இதன் காரணமாக அரசு போக்குவரத்துக் கழகங்கள் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.14 கோடி வரை நஷ்டத்தில் இயங்குகிறது. நிதி நெருக்கடியை சரிசெய்ய வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. அதன்படி, செலவை குறைக்கும் வகையில் போக்குவரத்துக் கழகங்களை இணைக்க வல்லுநர் குழு அரசுக்கு பரிந்துரைத்தது.
முதல்கட்டமாக, திருநெல்வேலியை மதுரை போக்குவரத்துக் கழகத்துடன் இணைக்குமாறு அறிவுறுத்தினர். ஏற்கனவே, நெல்லை மதுரை மண்டலத்துடன்தான் இருந்தது. 2010-ல் நெல்லை புதிய மண்டலம் உருவாக்கப்பட்டது. தற்போது, நெல்லை மண்டலத்தில் மட்டும் சுமார் 1897 பஸ்கள் மற்றும் 30 டெப்போக்கள் உள்ளன. 12,478 பேர் பணிபுரிகின்றனர்.
மொத்தம் உள்ள 8 மண்டலத்தில் நெல்லையில்தான் மோசமாக உள்ள பஸ்கள் இயக்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த மண்டலத்தில் இயக்கப்படும் 90 சதவீத பஸ்கள் காலாவதியானவை. இங்கு ஆண்டுக்கு சுமார் 2,000 கோடி நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, மண்டலத்தை இணைத்துவிட்டால் செலவு குறையும் என அறிக்கை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், வல்லுநகர் குழு பரிந்துரையை ஏற்று திருநெல்வேலி போக்குவரத்துக் கழகத்தை மதுரையுடன் இணைத்து இன்று அரசாணை பிறபிக்கப்பட்டுள்ளது. #TNSTC
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X