என் மலர்
செய்திகள்

விடைத்தாளை திருத்தும் பணியை பார்வையிடவந்த தலைமை ஆசிரியர் மயங்கி விழுந்து மரணம்
புஞ்சைபுளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்தவர் ஏசுராஜ் (வயது 53) இவர் புளியம்பட்டி அரசு மேல்நிலை (கே.வி.கே.) பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
தற்போது பிளஸ்-2 தேர்வு முடிந்து விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் நடந்து வரும் தேர்வு தாள் திருத்தும் பணியை பார்வையிடும் மார்க் சரி பார்க்கும் அலுவலகராக சென்று வந்தார்.
அந்த வகையில் தலைமை ஆசிரியர் ஏசுராஜ் நேற்று மாலை கோபியில் உள்ள பழனியம்மாள் பள்ளியில் நடக்கும் தேர்வுதாள் திருத்தும் பணியை பார்வையிடவும், சரி பார்க்கவும் சென்றார்.
கோபி பள்ளியில் மாடிப் படியில் அவர் ஏறி சென்ற போது திடீரென மயங்கி விழுந்துவிட்டார். அங்கு இருந்த சக ஆசிரியர்கள் பதட்டத்துடன் ஓடிவந்தனர். ஏசுராஜை மீட்டு கோபியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ஆனால்அங்கு சிகிச்சை பலனின்றி தலைமை ஆசிரியர் ஏசுராஜ் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இறந்த தலைமை ஆசிரியர் ஏசுராஜுக்கு ஜெஷீலா என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர்.
இதில் ஒரு மகளான ஜெனீபர் துபாயில் உள்ளார். இவரது கணவர் அங்கு விஞ்ஞானியாக உள்ளார். கணவருடன் புஞ்சை புளியம்பட்டிக்கு வந்திருந்த ஜெனீபர் நேற்று முன்தினம் தான் துபாய்க்கு திரும்பி சென்றுள்ளார்.
இந்த நிலையில் தந்தை இறந்த செய்தி அவருக்கு பேரிடியாக இருந்தது. கதறி அழுதார். மீண்டும் கணவருடன் புறப்பட்டு புளியம்பட்டிக்கு வருகிறார்.
இன்று மாலை அவர் வந்ததும் தலைமை ஆசிரியர் உடல் தகனம் செய்யப்படுகிறது.
தலைமை ஆசிரியர் ஏசுராஜ் உடல் இறுதி அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் பிரமுகர்கள், பொதுமக்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
புளியம்பட்டி கே.வி.கே. அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளும் திரண்டு வந்து தலைமை ஆசிரியர் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். #tamilnews






