என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திம்பம் மலைப்பாதையில் சென்ற கார் தீ பிடித்து எரிந்தது - காரில் வந்த 2 பேர் உயிர் தப்பினர்
Byமாலை மலர்20 April 2017 7:53 AM GMT (Updated: 20 April 2017 7:53 AM GMT)
சத்தியமங்கலம் வனப்பகுதியில் திம்பம் மலைப்பாதையில் சென்ற கார் தீ பிடித்து எரிந்ததில் காரில் வந்த 2 பேர் கீழே குதித்து உயிர் தப்பினர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் திம்பம் மலைப் பாதை உள்ளது. இந்த மலை உச்சியை அடைய 27 கொண்டை ஊசி வளைவுகளை கடக்க வேண்டும். இந்த வழியாகத்தான் கர்நாடக மாநிலத்துக்கு செல்ல முடியும்.
கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த ரெஜின் மற்றும் கோபாலன் ஆகிய 2பேர் ஒரு காரில் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகருக்கு ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர்.
இவர்கள் சென்ற கார் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை தாண்டி திம்பம் மலைப்பாதை 22-வது கொண்டை ஊசி வளைவில் சென்று கொண்டிருந்தது.
அப்போது காரின் முன்பகுதி திடீரென தீ பிடித்து குபு..குபுவென எரிந்தது. இதை கண்ட காரில் இருந்த இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
மலைப்பாதை பள்ளத்தில் விழுந்து விடாமல் ஓரமாக காரை நிறுத்திய அவர்கள் 2 பேரும் காரிலிருந்து கீழே குதித்தனர். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இது பற்றி ஆசனூர் போலீஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து எரிந்த காரின் தீயை அணைத்தனர். எனினும் காரின் முன் பகுதி முழுவதும் எரிந்து சேதமாகி விட்டது.
என்ஜினில் ஏற்பட்ட கோளாறால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஓடும் காரில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் மலைப்பாதையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது பரபரப்பும் ஏற்பட்டது.
இது பற்றி ஆசனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் திம்பம் மலைப் பாதை உள்ளது. இந்த மலை உச்சியை அடைய 27 கொண்டை ஊசி வளைவுகளை கடக்க வேண்டும். இந்த வழியாகத்தான் கர்நாடக மாநிலத்துக்கு செல்ல முடியும்.
கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த ரெஜின் மற்றும் கோபாலன் ஆகிய 2பேர் ஒரு காரில் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகருக்கு ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர்.
இவர்கள் சென்ற கார் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை தாண்டி திம்பம் மலைப்பாதை 22-வது கொண்டை ஊசி வளைவில் சென்று கொண்டிருந்தது.
அப்போது காரின் முன்பகுதி திடீரென தீ பிடித்து குபு..குபுவென எரிந்தது. இதை கண்ட காரில் இருந்த இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
மலைப்பாதை பள்ளத்தில் விழுந்து விடாமல் ஓரமாக காரை நிறுத்திய அவர்கள் 2 பேரும் காரிலிருந்து கீழே குதித்தனர். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இது பற்றி ஆசனூர் போலீஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து எரிந்த காரின் தீயை அணைத்தனர். எனினும் காரின் முன் பகுதி முழுவதும் எரிந்து சேதமாகி விட்டது.
என்ஜினில் ஏற்பட்ட கோளாறால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஓடும் காரில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் மலைப்பாதையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது பரபரப்பும் ஏற்பட்டது.
இது பற்றி ஆசனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X