என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈரோடு காவிரி ஆறு முற்றிலும் வறண்ட அவலம்
Byமாலை மலர்17 April 2017 6:33 AM GMT (Updated: 17 April 2017 6:33 AM GMT)
கடந்த ஆண்டு இருகரைகளையும் தொட்டு சென்ற காவிரி ஆற்றின் வறண்ட நிலையை கண்ட பக்தர்கள் மனம் வேதனைப்பட்டு செல்வதையும் பார்க்க முடிந்தது.
ஈரோடு:
கர்நாடக மாநிலம் குடகுமலையில் உருவாகி மேட்டூர் அணையை வந்தடைந்து அங்கிருந்து தமிழகத்தை வளம்கொழிக்க பாய்ந்து வரும் ஆறு காவிரி ஆறு.
சேலம் மாவட்டத்தில் முதலில் தவழ்ந்து ஈரோடு மாவட்டமான நெரிஞ்சிப்பேட்டை எல்லைக்கு வந்து படர்ந்து விரிந்து வருகிறது. இந்த காவிரி ஆறு.
பவானியை வந்தடைந்ததும் அங்கு பவானி ஆறும் காவிரியுடன் இணைந்து ஈரோடு கொடுமுடி வழியாக கரூர், திருச்சி சென்று தஞ்சையையும் வளம் கொழிக்க பாய்ந்து செல்கிறது காவிரி ஆறு. இப்படி தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களை வளம் கொழிக்க செய்யும் காவிரி ஆற்றின் இன்றைய நிலை பார்ப்போர் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.
ஈரோடு கருங்கல் பாளையத்தில் இரு கரைகளையும் தொட்டும் செல்லும் காவிரி ஆற்றில் தண்ணீர் முற்றிலும் வறண்டு போய் வெறும் பாறைகளாகத்தான் காட்சி அளிக்கிறது. ஆங்காங்கே சிறிய சிறிய பள்ளத்தில் மட்டும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
ஈரோடு மொடக்குறிச்சி அருகே பழமைவாய்ந்த நட்டாற்றீஸ்வரர் கோவில் உள்ளது. பாய்ந்து வரும் காவிரி ஆற்றின் மத்தியப் பகுதியில் இந்த கோவில் உள்ளது. மண்ணால் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து அகத்திய முனிவர் வழிபட்ட தலமாக இக்கோவில் உள்ளது.
இந்த கோவில் ஆற்றின் மையப்பகுதியில் இருப்பதால் ஆற்றின் இக்கரையில் உள்ள ஈரோடு மாவட்ட பக்தர்களும் அக்கரையில் உள்ள நாமக்கல் மாவட்ட பக்தர்களும் கோவிலுக்கு பரிசல்களில் வந்து விட்டு செல்வார்கள். தமிழ் வருடப்பிறப்பு அன்று நட்டாற்றீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா சிறப்பாக நடக்கும். விழாவில் ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட மக்கள் பரிசல்களில் காவிரி ஆற்றை கடந்து வருவார்கள்.
கடந்த ஆண்டு ஆற்றின் இருபுறத்தையும் தொட்டு காவிரி ஆறு சென்றதால் பக்தர்கள் பரிசல்களில் சென்றார்கள். ஆனால் இந்தாண்டோ காவிரி ஆற்றிலும் முற்றிலும் தண்ணீர் கிடையாது. இருகரை வரை வறண்டும் ஆற்றில் உள்ள பாறைகள்தான் தெரிகிறது. இதனால் பக்தர்கள் நடந்தே கோவிலுக்கு வந்து நட்டாற்றீஸ்வரை வழிபட்டு சென்றனர்.
கடந்த ஆண்டு இருகரைகளையும் தொட்டு சென்ற காவிரி ஆற்றின் வறண்ட நிலையை கண்ட பக்தர்கள் மனம் வேதனைப்பட்டு செல்வதையும் பார்க்க முடிந்தது.
கர்நாடக மாநிலம் குடகுமலையில் உருவாகி மேட்டூர் அணையை வந்தடைந்து அங்கிருந்து தமிழகத்தை வளம்கொழிக்க பாய்ந்து வரும் ஆறு காவிரி ஆறு.
சேலம் மாவட்டத்தில் முதலில் தவழ்ந்து ஈரோடு மாவட்டமான நெரிஞ்சிப்பேட்டை எல்லைக்கு வந்து படர்ந்து விரிந்து வருகிறது. இந்த காவிரி ஆறு.
பவானியை வந்தடைந்ததும் அங்கு பவானி ஆறும் காவிரியுடன் இணைந்து ஈரோடு கொடுமுடி வழியாக கரூர், திருச்சி சென்று தஞ்சையையும் வளம் கொழிக்க பாய்ந்து செல்கிறது காவிரி ஆறு. இப்படி தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களை வளம் கொழிக்க செய்யும் காவிரி ஆற்றின் இன்றைய நிலை பார்ப்போர் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.
ஈரோடு கருங்கல் பாளையத்தில் இரு கரைகளையும் தொட்டும் செல்லும் காவிரி ஆற்றில் தண்ணீர் முற்றிலும் வறண்டு போய் வெறும் பாறைகளாகத்தான் காட்சி அளிக்கிறது. ஆங்காங்கே சிறிய சிறிய பள்ளத்தில் மட்டும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
ஈரோடு மொடக்குறிச்சி அருகே பழமைவாய்ந்த நட்டாற்றீஸ்வரர் கோவில் உள்ளது. பாய்ந்து வரும் காவிரி ஆற்றின் மத்தியப் பகுதியில் இந்த கோவில் உள்ளது. மண்ணால் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து அகத்திய முனிவர் வழிபட்ட தலமாக இக்கோவில் உள்ளது.
இந்த கோவில் ஆற்றின் மையப்பகுதியில் இருப்பதால் ஆற்றின் இக்கரையில் உள்ள ஈரோடு மாவட்ட பக்தர்களும் அக்கரையில் உள்ள நாமக்கல் மாவட்ட பக்தர்களும் கோவிலுக்கு பரிசல்களில் வந்து விட்டு செல்வார்கள். தமிழ் வருடப்பிறப்பு அன்று நட்டாற்றீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா சிறப்பாக நடக்கும். விழாவில் ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட மக்கள் பரிசல்களில் காவிரி ஆற்றை கடந்து வருவார்கள்.
ஆற்றில் தண்ணீர் அதிகளவில் சென்றதால் நட்டாற்றீஸ்வரர் கோவிலுக்கு பரிசலில் சென்ற பக்தர்கள் (இது கடந்த ஆண்டு).
கடந்த ஆண்டு ஆற்றின் இருபுறத்தையும் தொட்டு காவிரி ஆறு சென்றதால் பக்தர்கள் பரிசல்களில் சென்றார்கள். ஆனால் இந்தாண்டோ காவிரி ஆற்றிலும் முற்றிலும் தண்ணீர் கிடையாது. இருகரை வரை வறண்டும் ஆற்றில் உள்ள பாறைகள்தான் தெரிகிறது. இதனால் பக்தர்கள் நடந்தே கோவிலுக்கு வந்து நட்டாற்றீஸ்வரை வழிபட்டு சென்றனர்.
கடந்த ஆண்டு இருகரைகளையும் தொட்டு சென்ற காவிரி ஆற்றின் வறண்ட நிலையை கண்ட பக்தர்கள் மனம் வேதனைப்பட்டு செல்வதையும் பார்க்க முடிந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X