என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேளாங்கண்ணியில் கடலில் மூழ்கி ஊட்டியை சேர்ந்த 2 பேர் பலி
    X

    வேளாங்கண்ணியில் கடலில் மூழ்கி ஊட்டியை சேர்ந்த 2 பேர் பலி

    வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த 2 வாலிபர்கள் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேளாங்கண்ணி:

    ஊட்டி பிங்கர்போஸ்ட் பெரியார் காலனியை சேர்ந்தவர் தனிஸ்கிளாஸ். இவருடைய மகன் டோனிவிக்ரம் (வயது21). அதேபகுதியை சேர்ந்த பாக்கியநாதன் மகன் அனிஸ்கால்ட்டின் (21). இவர் ஊட்டியில் உள்ள ஒரு செருப்பு கடையில் வேலைபார்த்து வந்தனர். 

    இந்தநிலையில் கடந்த 13-ந்தேதி டோனிவிக்ரம், அனிஸ்கால்ட்டின் உள்பட 7 பேர் ஊட்டியிலிருந்து புறப்பட்டு நாகை மாவட்டம்  வேளாங்கண்ணிக்கு  சுற்றுலா வந்தனர். அங்கு அனைவரும் அறை எடுத்து தங்கி இருந்தனர். இதையடுத்து நேற்று 7 பேரும் வேளாங்கண்ணி கடலில் குளித்து கொண்டிருந்தனர். இதில் 5 பேர் மட்டும் குளித்து விட்டு கரைக்கு திரும்பினர்.

    ஆனால் டோனிவிக்ரம், அனிஸ்கால்ட்டின் ஆகிய 2 பேரும் கடலில்  குளித்து கொண்டிருந்த போது திடீரென அலையில் சிக்கினர். இதில் தண்ணீரில் மூழ்கி 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசாருக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனே கீழையூர் கடலோர காவல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் கடலோர காவல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து கீழையூர் கடலோர காவல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×