என் மலர்
செய்திகள்

வேளாங்கண்ணியில் கடலில் மூழ்கி ஊட்டியை சேர்ந்த 2 பேர் பலி
வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த 2 வாலிபர்கள் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேளாங்கண்ணி:
ஊட்டி பிங்கர்போஸ்ட் பெரியார் காலனியை சேர்ந்தவர் தனிஸ்கிளாஸ். இவருடைய மகன் டோனிவிக்ரம் (வயது21). அதேபகுதியை சேர்ந்த பாக்கியநாதன் மகன் அனிஸ்கால்ட்டின் (21). இவர் ஊட்டியில் உள்ள ஒரு செருப்பு கடையில் வேலைபார்த்து வந்தனர்.
இந்தநிலையில் கடந்த 13-ந்தேதி டோனிவிக்ரம், அனிஸ்கால்ட்டின் உள்பட 7 பேர் ஊட்டியிலிருந்து புறப்பட்டு நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தனர். அங்கு அனைவரும் அறை எடுத்து தங்கி இருந்தனர். இதையடுத்து நேற்று 7 பேரும் வேளாங்கண்ணி கடலில் குளித்து கொண்டிருந்தனர். இதில் 5 பேர் மட்டும் குளித்து விட்டு கரைக்கு திரும்பினர்.
ஆனால் டோனிவிக்ரம், அனிஸ்கால்ட்டின் ஆகிய 2 பேரும் கடலில் குளித்து கொண்டிருந்த போது திடீரென அலையில் சிக்கினர். இதில் தண்ணீரில் மூழ்கி 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசாருக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனே கீழையூர் கடலோர காவல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் கடலோர காவல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கீழையூர் கடலோர காவல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊட்டி பிங்கர்போஸ்ட் பெரியார் காலனியை சேர்ந்தவர் தனிஸ்கிளாஸ். இவருடைய மகன் டோனிவிக்ரம் (வயது21). அதேபகுதியை சேர்ந்த பாக்கியநாதன் மகன் அனிஸ்கால்ட்டின் (21). இவர் ஊட்டியில் உள்ள ஒரு செருப்பு கடையில் வேலைபார்த்து வந்தனர்.
இந்தநிலையில் கடந்த 13-ந்தேதி டோனிவிக்ரம், அனிஸ்கால்ட்டின் உள்பட 7 பேர் ஊட்டியிலிருந்து புறப்பட்டு நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தனர். அங்கு அனைவரும் அறை எடுத்து தங்கி இருந்தனர். இதையடுத்து நேற்று 7 பேரும் வேளாங்கண்ணி கடலில் குளித்து கொண்டிருந்தனர். இதில் 5 பேர் மட்டும் குளித்து விட்டு கரைக்கு திரும்பினர்.
ஆனால் டோனிவிக்ரம், அனிஸ்கால்ட்டின் ஆகிய 2 பேரும் கடலில் குளித்து கொண்டிருந்த போது திடீரென அலையில் சிக்கினர். இதில் தண்ணீரில் மூழ்கி 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசாருக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனே கீழையூர் கடலோர காவல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் கடலோர காவல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கீழையூர் கடலோர காவல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






