என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சுழியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு: மாணவி பலி
Byமாலை மலர்13 April 2017 4:26 AM GMT (Updated: 13 April 2017 4:26 AM GMT)
டெங்கு காய்ச்சலுக்கு மாணவி பலியான நிலையில் மேலும் 50 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் திருச்சுழி கிராமத்தில் சுகாதாரத் துறையினர் முகாமிட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
திருச்சுழி:
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள வடக்குப்பட்டி, பரளச்சி, செங்குளம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது.
இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலரும் தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இருப்பினும் காய்ச்சல் குணமாகவில்லை.
மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வடக்குப்பட்டியைச் சேர்ந்த மனோகரன் மகள் ஜெனிபர் (வயது 11) ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அப்போது அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து அவர் மதுரை அரசு ஆஸ்பத் திரியில் கடந்த 11-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்றிரவு ஜெனிபர் பரிதாபமாக இறந்தார். பலியான ஜெனிபர் அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்தார்.
மாணவி இறந்ததைத் தொடர்ந்து வடக்குப்பட்டி, பரளச்சி கிராமங்களில் மக்களிடையே பீதி ஏற்பட்டது. ஏற்கனவே காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தவர்கள் தங்களுக்கும் டெங்கு பாதிப்பு இருக்கலாம் என அச்சப்பட்டனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் அரசின் சுகாதாரக்குழுவினர் குறிப்பிட்ட கிராமங்களுக்கு சென்று தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள வடக்குப்பட்டி, பரளச்சி, செங்குளம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது.
இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலரும் தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இருப்பினும் காய்ச்சல் குணமாகவில்லை.
மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வடக்குப்பட்டியைச் சேர்ந்த மனோகரன் மகள் ஜெனிபர் (வயது 11) ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அப்போது அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து அவர் மதுரை அரசு ஆஸ்பத் திரியில் கடந்த 11-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்றிரவு ஜெனிபர் பரிதாபமாக இறந்தார். பலியான ஜெனிபர் அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்தார்.
மாணவி இறந்ததைத் தொடர்ந்து வடக்குப்பட்டி, பரளச்சி கிராமங்களில் மக்களிடையே பீதி ஏற்பட்டது. ஏற்கனவே காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தவர்கள் தங்களுக்கும் டெங்கு பாதிப்பு இருக்கலாம் என அச்சப்பட்டனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் அரசின் சுகாதாரக்குழுவினர் குறிப்பிட்ட கிராமங்களுக்கு சென்று தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X