என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் புத்தக கண்காட்சி: 21-ந்தேதி முதல் மே 1-ந்தேதி வரை நடக்கிறது
Byமாலை மலர்13 April 2017 3:43 AM GMT (Updated: 13 April 2017 3:44 AM GMT)
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் வருகிற 21-ந்தேதி முதல் மே 1-ந்தேதி வரை புத்தக கண்காட்சியை நடத்துவதற்கான ஏற்பாடுகளை ‘பபாசி’ செய்து வருகிறது.
சென்னை:
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க(பபாசி) செயலாளர் கே.எஸ்.புகழேந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்(பபாசி) சென்னை புத்தக கண்காட்சியை 40 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. சென்னை தவிர மதுரை, திருச்சி போன்ற நகரங்களிலும் ‘பபாசி’ புத்தகக் கண்காட்சிகளை நடத்தி வருகிறது.
இந்த ஆண்டு உலக புத்தகத் திருவிழாவை சிறப்பான முறையில் கொண்டாடும் நோக்கத்துடன் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் வருகிற 21-ந்தேதி முதல் மே 1-ந்தேதி வரை புத்தக கண்காட்சியை நடத்துவதற்கான ஏற்பாடுகளை ‘பபாசி’ செய்து வருகிறது.
21-ந்தேதி மாலை 5 மணிக்கு தொடக்க விழா நடைபெறும். விடுமுறை நாட்களான ஏப்ரல் 22, 23, 29, 30, மே 1-ந்தேதிகளில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும், ஏப்ரல் 24, 25, 26, 27, 28 ஆகிய வார நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரையும் புத்தக கண்காட்சி நடைபெறும். எல்லா புத்தகங்களுக்கும் 10 சதவீதம் கழிவு உண்டு. நுழைவுக் கட்டணம் இலவசம்.
குழந்தைகள் புத்தகங்கள், போட்டித் தேர்வுக்கான புத்தகங்களுக்கு என்று சிறப்பு அரங்குகள் இடம் பெறுகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க(பபாசி) செயலாளர் கே.எஸ்.புகழேந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்(பபாசி) சென்னை புத்தக கண்காட்சியை 40 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. சென்னை தவிர மதுரை, திருச்சி போன்ற நகரங்களிலும் ‘பபாசி’ புத்தகக் கண்காட்சிகளை நடத்தி வருகிறது.
இந்த ஆண்டு உலக புத்தகத் திருவிழாவை சிறப்பான முறையில் கொண்டாடும் நோக்கத்துடன் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் வருகிற 21-ந்தேதி முதல் மே 1-ந்தேதி வரை புத்தக கண்காட்சியை நடத்துவதற்கான ஏற்பாடுகளை ‘பபாசி’ செய்து வருகிறது.
21-ந்தேதி மாலை 5 மணிக்கு தொடக்க விழா நடைபெறும். விடுமுறை நாட்களான ஏப்ரல் 22, 23, 29, 30, மே 1-ந்தேதிகளில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும், ஏப்ரல் 24, 25, 26, 27, 28 ஆகிய வார நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரையும் புத்தக கண்காட்சி நடைபெறும். எல்லா புத்தகங்களுக்கும் 10 சதவீதம் கழிவு உண்டு. நுழைவுக் கட்டணம் இலவசம்.
குழந்தைகள் புத்தகங்கள், போட்டித் தேர்வுக்கான புத்தகங்களுக்கு என்று சிறப்பு அரங்குகள் இடம் பெறுகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X