என் மலர்
செய்திகள்

புதுக்கோட்டை: வேன் மீது டிராக்டர் மோதி 4 பேர் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே வேன் மீது டிராக்டர் மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள புதுநகர் பகுதியில் ஒரு வேன் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது. அப்போது வேன் மீது டிராக்டர் ஒன்று பலமாக மோதியது. இதனால் வேன் கடுமையாக சேதமடைந்தது. அதில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகினார். 20 பேர் காயமடைந்தனர்.
குடியாத்தம் அருகே உள்ள லட்சுமணாபுரம் பகுதியில் தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு தொழிலாளி பலியாகினார். 14 பேர் தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள புதுநகர் பகுதியில் ஒரு வேன் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது. அப்போது வேன் மீது டிராக்டர் ஒன்று பலமாக மோதியது. இதனால் வேன் கடுமையாக சேதமடைந்தது. அதில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகினார். 20 பேர் காயமடைந்தனர்.
குடியாத்தம் அருகே உள்ள லட்சுமணாபுரம் பகுதியில் தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு தொழிலாளி பலியாகினார். 14 பேர் தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story






