என் மலர்
செய்திகள்

‘சரக்கு’ வாங்க ‘குடி’மகன்களுக்கு பாதுகாப்பு வழங்கிய போலீசார்
ஈரோடு மாவட்டத்தில் நீண்ட வரிசையில் நின்று சரக்கு வாங்கும் குடிமகன்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு வழங்கினர்.
ஈரோடு:
நெடுஞ்சாலையோரம் உள்ள மது கடைகளை மூட வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டதையொட்டி பல கடைகள் அடைக்கப்பட்டன. இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் பல டாஸ்மாக் மதுபானக் கடைகள் அகற்றப்பட்டன.
ஈரோடு நகரில் ரெயில் நிலைய ரோட்டில்மட்டும் 4 மதுக்கடைகள் இருந்தது. தற்போது இந்த 4 மதுக் கடைகளும் அடைக்கப்பட்டன. இந்த 4 மதுக்கடைகளும் எப்போதும் ‘குடி’ மகன்கள் கூட்டம் நிரம்பி வழியும். ஆனால் இப்போது அந்த கடைகள் மூடப்பட்டு உள்ளதால் வேறுகடை எங்கு உள்ளது? என்று குடிமகன்கள் தவித்தார்கள்.
நகரில் ஆங்காங்கே உள்ள மதுகடைகளில் இதனால் கூட்டம் அலைமோதியது. ரேசன் கடை மற்றும் சினிமா தியேட்டர்களில் வரிசையில் காத்திருந்து டிக்கெட்டு எடுப்பதுபோல் நீண்ட வரிசையில் காத்திருந்து சரக்குகளை வாங்கி குடித்தனர்.
இதேபோல் டாஸ்மாக் பார்களிலும் டம்ளர், நொருக்கு தீனி வாங்க குடிமகன்கள் வரிசையில் காத்திருந்து வாங்கினர். இதேபோல் ஈரோடு நாச்சியப்பா 2-வது வீதியில் உள்ள 2 மதுக்கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த மதுக்கடைகளையொட்டி பூக்கடைகள் இருப்பதால் பெண்கள் வர அச்சப்பட்டனர். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகமானதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.
குடிமகன்கள் கூட்டம் அதிகமானதால் போலீசார் அவர்களை வரிசையில் நிற்க சொன்னார்கள். மேலும் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்கவும் குடிமகன்களிடையே மோதல் ஏற்படாமல் இருக்கவம் பாதுகாப்பும் கொடுத்தனர்.
கூட்டம் அதிகமாக உள்ள கடைகளில் சரக்குகள் தீர்ந்ததால் உடனடியாக மக்கள் தாகத்தை போக்க லாரிகளில் குடிதண்ணீர் வருவதுபோல் குடோனில் இருந்து லாரிகளில் உடனடியாக சரக்குகள் அந்தந்த கடைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு இறக்கப்பட்டது. இதனால் குடிமகன்களின் தாகமும் தீர்ந்தது.
முன்பு கடையில் காத்திருக்காமல் பணத்தை கொடுத்து உடனே மதுபானத்தை வாங்கி செல்லும் குடிமகன்கள் இப்போது வரிசையில் காத்திருப்பதால் தவித்து கொண்டிருக்கிறார்கள்.
வரிசையில் காத்திருந்த குடிமகன்களில் சிலர் கூறும்போது, ‘‘ரேசன் கார்டுகளில் பொருட்கள் வழங்குவதுபோல் எங்களுக்கும் அதேபோல் ஒரு கார்டு கொடுக்க வேண்டும். அதுவும் தற்போது ரேசன் கார்டுக்கு ஸ்மார்ட் கார்டு கொடுக்கிறார்கள். அதேபோல் எங்களுக்கும் ‘ஸ்மார்ட் கார்டு’ கொடுக்க வேண்டும். அதை வைத்து நாங்கள் சரக்கு வாங்கி கொள்வோம். மேலும் ஒரு பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கு மற்றொரு பகுதியை சேர்ந்தவர்கள் வரக்கூடாது. அவர்களுக்குரிய மதுகடையில் தான் வாங்க வேண்டும். அப்போதுதான் அனைவருக்கும் மதுபானங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கும்‘‘ என்று கூறினர்.
நெடுஞ்சாலையோரம் உள்ள மது கடைகளை மூட வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டதையொட்டி பல கடைகள் அடைக்கப்பட்டன. இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் பல டாஸ்மாக் மதுபானக் கடைகள் அகற்றப்பட்டன.
ஈரோடு நகரில் ரெயில் நிலைய ரோட்டில்மட்டும் 4 மதுக்கடைகள் இருந்தது. தற்போது இந்த 4 மதுக் கடைகளும் அடைக்கப்பட்டன. இந்த 4 மதுக்கடைகளும் எப்போதும் ‘குடி’ மகன்கள் கூட்டம் நிரம்பி வழியும். ஆனால் இப்போது அந்த கடைகள் மூடப்பட்டு உள்ளதால் வேறுகடை எங்கு உள்ளது? என்று குடிமகன்கள் தவித்தார்கள்.
நகரில் ஆங்காங்கே உள்ள மதுகடைகளில் இதனால் கூட்டம் அலைமோதியது. ரேசன் கடை மற்றும் சினிமா தியேட்டர்களில் வரிசையில் காத்திருந்து டிக்கெட்டு எடுப்பதுபோல் நீண்ட வரிசையில் காத்திருந்து சரக்குகளை வாங்கி குடித்தனர்.
இதேபோல் டாஸ்மாக் பார்களிலும் டம்ளர், நொருக்கு தீனி வாங்க குடிமகன்கள் வரிசையில் காத்திருந்து வாங்கினர். இதேபோல் ஈரோடு நாச்சியப்பா 2-வது வீதியில் உள்ள 2 மதுக்கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த மதுக்கடைகளையொட்டி பூக்கடைகள் இருப்பதால் பெண்கள் வர அச்சப்பட்டனர். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகமானதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.
குடிமகன்கள் கூட்டம் அதிகமானதால் போலீசார் அவர்களை வரிசையில் நிற்க சொன்னார்கள். மேலும் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்கவும் குடிமகன்களிடையே மோதல் ஏற்படாமல் இருக்கவம் பாதுகாப்பும் கொடுத்தனர்.
கூட்டம் அதிகமாக உள்ள கடைகளில் சரக்குகள் தீர்ந்ததால் உடனடியாக மக்கள் தாகத்தை போக்க லாரிகளில் குடிதண்ணீர் வருவதுபோல் குடோனில் இருந்து லாரிகளில் உடனடியாக சரக்குகள் அந்தந்த கடைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு இறக்கப்பட்டது. இதனால் குடிமகன்களின் தாகமும் தீர்ந்தது.
முன்பு கடையில் காத்திருக்காமல் பணத்தை கொடுத்து உடனே மதுபானத்தை வாங்கி செல்லும் குடிமகன்கள் இப்போது வரிசையில் காத்திருப்பதால் தவித்து கொண்டிருக்கிறார்கள்.
வரிசையில் காத்திருந்த குடிமகன்களில் சிலர் கூறும்போது, ‘‘ரேசன் கார்டுகளில் பொருட்கள் வழங்குவதுபோல் எங்களுக்கும் அதேபோல் ஒரு கார்டு கொடுக்க வேண்டும். அதுவும் தற்போது ரேசன் கார்டுக்கு ஸ்மார்ட் கார்டு கொடுக்கிறார்கள். அதேபோல் எங்களுக்கும் ‘ஸ்மார்ட் கார்டு’ கொடுக்க வேண்டும். அதை வைத்து நாங்கள் சரக்கு வாங்கி கொள்வோம். மேலும் ஒரு பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கு மற்றொரு பகுதியை சேர்ந்தவர்கள் வரக்கூடாது. அவர்களுக்குரிய மதுகடையில் தான் வாங்க வேண்டும். அப்போதுதான் அனைவருக்கும் மதுபானங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கும்‘‘ என்று கூறினர்.
Next Story






