என் மலர்
செய்திகள்

மணப்பாக்கத்தில் சிக்கிய ரூ.3 கோடி செல்லாத நோட்டுகள் வருமான வரித்துறையிடம் ஒப்படைப்பு
மணப்பாக்கத்தில் சிக்கிய ரூ.3 கோடி செல்லாத நோட்டுகள் மற்றும் கைதான 2 பேர் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இது தொடர்பாக டாக்டரிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
ஆலந்தூர்:
சென்னையை அடுத்த நந்தம்பாக்கம், மணப்பாக்கம் சேதுலட்சுமி அவென்யூவில் நந்தம்பாக்கம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு காருடன் நின்ற 3 பேரில் ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடிவிட்டார். மற்ற 2 பேரும் போலீசாரிடம் சிக்கினர்.
விசாரணையில் அவர்கள், சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்த கண்ணன் (வயது 43), தி.நகரை சேர்ந்த கிருஷ்ணமோகன் (53) என்பதும், அந்த காரில் செல்லாததாக அறிவிக்கப்பட்ட பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் ரூ.3 கோடி இருப்பதும் தெரிந்தது.
பெசன்ட் நகரில் உள்ள தனியார் மருத்துவமனை டாக்டர் ஒருவருக்கு சொந்தமான ரூ.3 கோடி செல்லாத நோட்டுகளை, தப்பி ஓடிய தரகர் பிரசாத் (35) மூலம் கமிஷன் அடிப்படையில் மணப்பாக்கத்தை சேர்ந்த ஒருவரிடம் கொடுத்து மாற்ற முயன்றது விசாரணையில் தெரியவந்தது. பிடிபட்ட 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.3 கோடி செல்லாத நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
கைதான 2 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். ஆனால் அதில் தப்பி ஓடிய தரகர் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. மேலும் ரூ.3 கோடி செல்லாத நோட்டுகளை அவர்களிடம் கொடுத்ததாக கூறப்படும் தனியார் மருத்துவமனை டாக்டர், தற்போது டெல்லியில் நடக்கும் ஒரு கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றுவிட்டதாக தெரிகிறது.
டெல்லியில் இருந்து டாக்டர் சென்னை வந்த பிறகு அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
மேலும் மணப்பாக்கத்தில் கமிஷன் அடிப்படையில் செல் லாத ரூபாய் நோட்டுகளை மாற்றி தரும் நபர் யார்?, இவர் களுக்கு வங்கி அதிகாரிகள் யாராவது உதவி செய்கிறார் களா? எனவும் போலீசார் தீவிர மாக விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையில் கைதான 2 பேரையும், அவர்களிடம் இருந்து பறிமுதலான ரூ.3 கோடி செல்லாத நோட்டுகளையும் சென்னையில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகளிடம் நந்தம்பாக்கம் போலீசார் ஒப்படைத்தனர். இது தொடர்பான புகார்களுக்கு டாக்டரிடம் விளக்கம் கேட்க வருமான வரித்துறையினர் முடிவு செய்து உள்ளதாக தெரிகிறது.
சென்னையை அடுத்த நந்தம்பாக்கம், மணப்பாக்கம் சேதுலட்சுமி அவென்யூவில் நந்தம்பாக்கம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு காருடன் நின்ற 3 பேரில் ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடிவிட்டார். மற்ற 2 பேரும் போலீசாரிடம் சிக்கினர்.
விசாரணையில் அவர்கள், சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்த கண்ணன் (வயது 43), தி.நகரை சேர்ந்த கிருஷ்ணமோகன் (53) என்பதும், அந்த காரில் செல்லாததாக அறிவிக்கப்பட்ட பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் ரூ.3 கோடி இருப்பதும் தெரிந்தது.
பெசன்ட் நகரில் உள்ள தனியார் மருத்துவமனை டாக்டர் ஒருவருக்கு சொந்தமான ரூ.3 கோடி செல்லாத நோட்டுகளை, தப்பி ஓடிய தரகர் பிரசாத் (35) மூலம் கமிஷன் அடிப்படையில் மணப்பாக்கத்தை சேர்ந்த ஒருவரிடம் கொடுத்து மாற்ற முயன்றது விசாரணையில் தெரியவந்தது. பிடிபட்ட 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.3 கோடி செல்லாத நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
கைதான 2 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். ஆனால் அதில் தப்பி ஓடிய தரகர் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. மேலும் ரூ.3 கோடி செல்லாத நோட்டுகளை அவர்களிடம் கொடுத்ததாக கூறப்படும் தனியார் மருத்துவமனை டாக்டர், தற்போது டெல்லியில் நடக்கும் ஒரு கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றுவிட்டதாக தெரிகிறது.
டெல்லியில் இருந்து டாக்டர் சென்னை வந்த பிறகு அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
மேலும் மணப்பாக்கத்தில் கமிஷன் அடிப்படையில் செல் லாத ரூபாய் நோட்டுகளை மாற்றி தரும் நபர் யார்?, இவர் களுக்கு வங்கி அதிகாரிகள் யாராவது உதவி செய்கிறார் களா? எனவும் போலீசார் தீவிர மாக விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையில் கைதான 2 பேரையும், அவர்களிடம் இருந்து பறிமுதலான ரூ.3 கோடி செல்லாத நோட்டுகளையும் சென்னையில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகளிடம் நந்தம்பாக்கம் போலீசார் ஒப்படைத்தனர். இது தொடர்பான புகார்களுக்கு டாக்டரிடம் விளக்கம் கேட்க வருமான வரித்துறையினர் முடிவு செய்து உள்ளதாக தெரிகிறது.
Next Story






